செய்யாறில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை யொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு செய்யாறு ஒன்றிய அதிமுக செயலாளர் மகேந்திரன் கோப்பையை வழங்கினார்
செய்யாறில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற திருவண்ணாமலை மாவட்ட அணிக்கு செய்யாறு வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் கோப்பையை வழங்கி பாராட்டினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் பிசிகல் சேலஞ்சியின் கீழ் (TNCAPC) மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் நடந்தது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நடந்த கிரிக்கெட் போட்டியை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் மாற்றுத்திறனாளி அணிக்கும் சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளி அணிக்கும் இடையே 3 போட்டிகள் நடைபெற்றது.
இதில் 2 க்கு 1 என்ற கணக்கில் திருவண்ணாமலை மாவட்ட அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
திருவண்ணாமலை மாவட்ட சுரேஷ் செல்வம் தலைமையிலான அணிக்கு முதல் பரிசும் சேலம் மாவட்டம் மணிகண்டன் தலைமையிலான அணிக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் தொடர் நாயகன் விருதை சேலம் அணி தலைவர் மணிகண்டனுக்கும் ஆட்ட நாயகன் விருது கோப்பையை திருவண்ணாமலை மாவட்ட அணி தலைவர் சுரேஷ் செல்வத்திற்கும் ஒன்றிய அதிமுக செயலாளர் எம்.மகேந்திரன் வழங்கி பாராட்டினார்.
Comments
Post a Comment