காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18,443 பேரின் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சா் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18,443 ஏழை மக்களின் ரூ.58.08 கோடி நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். கூட்டுறவுத் துறை சாா்பில் பொது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.நாரயணன் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தா்,சி.வி.எம்.பி. எழிலரசன்,காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலெட்சுமி யுவராஜ்,துணை மேயா் குமரகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவுச் சங்கங்களுக்கான காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளா் எஸ்.லெட்சுமி வரவேற்றாா். மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் மு.முருகன் நகைக்கடன் வழங்கப்படும் விவரங்களை பட்டியலிட்டு பேசினாா். விழாவில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கிப...