Skip to main content

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டங்கள் - தெரிந்துகொள்ள வேண்டிய டாப் 10 தகவல்கள் இதோ!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய

“அக்னிபாத் திட்டம்” நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடைபெறுவது குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான டாப் 10 தகவல்கள் இதோ!

1. ராணுவத்தில் வழங்கப்படும் கடுமையான பயிற்சிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் பாதியிலேயே வெளியேறும் இளைஞர்களும், முழுமையாக பணியை முடித்து வெளியேறி வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களும் ஆயுதப் பயிற்சிகளை பெற்றவர்கள் என்பதால் வேலை இல்லாததால், அவர்கள் எளிதில் தீவிரவாத இயக்கங்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.

2. ராணுவ ரகசியங்களை தெரிந்துகொள்ள தீவிரவாத இயக்கங்களும் தங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை 4 ஆண்டுகால ராணுவப் பணிக்கு அனுப்பக் கூடும் எனவும் முன்னாள் ராணுவ வீரர்கள் எச்சரிக்கின்றனர்.

1970-களில் ராணுவத்தில் சுமார் 6, 7 ஆண்டுக்கால பயிற்சி பெற்று திரும்பியவர்களே, காலிஸ்தான் தீவிரவாத இயக்கத்தில் அதிகம் சேர்ந்தார்கள் என்ற வரலாறை மறுக்க இயலாது.

3. 4 ஆண்டுகள் மட்டும்தானே அக்னிபாத் திட்டத்தில் இருக்கப் போகிறோம் என்ற மனநிலையில் பணியில் இளைஞர்கள் பணியாற்றினால் உயரதிகாரிகளால் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

4. ராணுவத்தில் முழுப் புரிதலையும் பெற 2,3 ஆண்டுகள் ஆகும் என்ற நிலையில், அக்னிபாத் வீரர்களை வைத்து போர், கலவரம் போன்ற நெருக்கடியான சூழலை கையாளும்போது அவர்களது உயிருக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாக அமைத்து விடும் என எச்சரிக்கை விடுக்கின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.

5. அரசு வேலை என்றால் நிரந்தரப் பணி என்று மக்கள் நம்பிக்கை வைத்திருந்த நிலையில், 4 ஆண்டுகளில் 75% பேர் வெளியேற்றப்படுவர் என்ற எச்சரிக்கை வசனம் அக்னிபாத் “அக்னி”யாய் தகிக்க மிக முக்கிய காரணம் ஆகும்.

6. 25% பேர் மட்டுமே பணி நிரந்தரம் பெற்று ஓய்வூதிய பலன்களை பெறும் நிலையில், மீதமுள்ள 75% பேர் ஓய்வூதிய பலன்கள் இன்றி வெளியேற்றப்படுவர்.

சேவா நிதியாக ரூ.11-12 லட்சம் வழங்கப்படும் எனும் போதிலும் போராட்ட அக்னியை அணைக்க அது போதவில்லை.

7. 12 ஆம் வகுப்பு முடித்து பணியில் சேர்பவர்கள் 4 ஆண்டு நிறைவுக்கு பின், அவர்களது வயதில் பட்டம் பெற்று இருக்கும் மற்ற இளைஞர்களோடு போட்டியிட வேண்டிய சூழல் உருவாகும் என்றும், அவர்கள் பட்டம் பெற்று வேலைக்கு செல்ல எண்ணினால் 26 வயதில்தான் அது சாத்தியப்படும் என்ற சூழல் நிலவுகிறது.

8. தற்போதுள்ள ராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை காலப்போக்கில் அழிக்கப்பட்டு அக்னிபாத் போன்ற 4 ஆண்டு கால குறுகிய கால பணிமுறை தொடர வாய்ப்பிருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

9. அமெரிக்கா போன்ற நாடுகளில் அடிக்கடி நாம் பார்க்கும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும்பாலும் குறுகிய காலம் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரால் நிகழ்த்தப்படுகின்றன.

அதுபோன்ற ஒரு பாதுகாப்பற்ற சூழல் நமது நாட்டில் உருவாக வாய்ப்பு உருவாகி விடும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

10. ராணுவ வீரர்களின் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்பதை மத்திய அரசே தெரிவித்துள்ளது.

செலவை குறைக்க ஓய்வூதிய திட்டத்தில் நிதி மேலாண்மை எவ்வாறு செய்வது என நிதி ஆலோசனை பெறுவதை விட்டுவிட்டு, ராணுவ ஆட்சேர்ப்பில் கைவைப்பதில் ஆபத்தில் முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர் முன்னாள் ராணுவ வீரர்கள்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...