Skip to main content

அதிமுக பொதுக்குழுவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிப்பு!அசிங்கப்பட்ட ஓபிஎஸ்!

அதிமுக பொதுக்குழுவில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களும்  நிராகரிப்பு!
அசிங்கப்பட்ட ஓபிஎஸ்!

சென்னை:

சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் கூடி இருந்த எடப்பாடி ஆதரவாளர்களால் ஓ பன்னீர்செல்வம் கடுமையாக அவமதிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டம்  சர்ச்சையில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

தமிழக சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கட்சியின் பொதுக்குழுவில் ஒட்டுமொத்த தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுகிறது, என்றைக்கு ஒற்றைத்தலைமை தீர்மானம் வருகிறதோ அன்றைய பொதுக்குழுவே உண்மையான ஒன்று என்று கே.பி.முனுசாமி மேடையில் அறிவித்தார்.

என்ன சொன்னார் தமிழ் மகன் உசேன்

அதன்பின் இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார் .

இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் மேடையில் பேசிய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ல் அதிமுகவின் பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவித்தார்.

என்ன நடந்தது?

அதாவது மீண்டும் பொதுக்குழு கூடும். அப்போது ஒற்றை தலைமை பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் மகன் உசேன் அறிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் வெளிநடப்பு செய்தார். முன்னதாக பொதுக்குழு கூடிய போது 23 தீர்மானங்களையும் ஓ பன்னீர்செல்வம் அவையில் அறிமுகம் செய்தார்.

இதையடுத்து இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அந்த தீர்மானங்களை வழி மொழிந்து பேசினார்.

அண்ணன் ஓபிஎஸ் முன்மொழிந்த தீர்மானங்களை நான் வழி மொழிகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் பலர் நேற்று மேடையில் ஓபிஎஸ்ஸை அவமதித்தனர்.

ஓபிஎஸ் வந்ததும் வெளியே போயா.. வெளியே போயா என்று கூறி கோஷம் எழுப்பினார்கள்.

எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரும் ஓபிஎஸ் முகத்தை பார்த்ததும் வேறு பக்கம் திரும்பிக்கொண்டனர்.

அவரை மண்டபத்திற்கு வெளியில் இருந்த படியே விமர்சனம் செய்தனர். அதேபோல் ஓபிஎஸ் வெளிநடப்பு செய்த போதும் எடப்பாடி ஆதரவாளர்கள் அவரை பார்த்து கோஷம் எழுப்பினர். வெளியே போயா.. துரோகி.. துரோகி என்று கூறி கோஷம் எழுப்பினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்

அதோடு வெளியேற சென்ற ஓபிஎஸ் மீது பாட்டில்கள் வீசப்பட்டன. அதோடு அவரின் காரும் பஞ்சர் செய்யப்பட்டது.

3 முறை முதல்வர்,மூத்த அரசியல்வாதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மீது வாட்டர் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் எடப்பாடி மட்டும் எதுவும் கோபமாக பேசாமல் அண்ணன் என்று மரியாதையாக குறிப்பிட்டார். இவர் அண்ணன் என்று சொல்லும் போது ஓபிஎஸ் விழித்தபடியே வேறு பக்கம் பார்த்துக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...