வானகரம்: அதிமுக பொதுக்குழு! "ஒற்றைத் தலைமை"க்கு பெருகிவரும் ஆதரவு!
சென்னை:
அதிமுக ஒற்றை தலைமைக்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில் எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ப்பார் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது
ஆங்காங்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கோஷங்கள் அதிகரித்து வருகின்றன
இச்சூழலில் இன்று சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூடுகிறது ஏகமனதாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பதவியேற்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது திருவண்ணாமலை தெற்கு வடக்கு மாவட்டங்களை சேர்ந்த அதிமுக வினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
மாவட்ட கழக செயலாளர்கள் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ தூசி கே மோகன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ இவர்களின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் வானகரத்தில் திரண்டுள்ளனர்
படத்தில்: ஆதரவு கோஷங்கள் எழுப்பும் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் செய்யாறு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள்,தொண்டர்கள்
Comments
Post a Comment