“மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது தேசத்தின் பலம்” – தமிழ்ச் சங்க விழாவில் பேரா. அப்துல் காதர்
“மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது தேசத்தின் பலம்” – தமிழ்ச் சங்க விழாவில் பேரா. அப்துல் காதர்

“மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது தேசத்தின் பலம்” – தமிழ்ச் சங்க விழாவில் பேரா. அப்துல் காதர்
வந்தவாசி:
மதநல்லிணக்கமும் மக்கள் ஒற்றுமையுமே நமது இந்திய தேசத்தின் பலமாக
இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என பேரா அப்துல் காதர் குறிப்பிட்டார்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில்
மனிதநேய தமிழ்த் திருவிழா நடைபெற்றது
வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 100-ஆவது நிகழ்வாக நடைபெற்ற மனிதநேய
தமிழ்த்திருவிழா வந்தவாசி கோட்டை மூலையில் அமைக்கப்பட்ட ஆசிரியர் அ.மு.உசேன் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சங்கத் தலைவர் பீ.ரகமத்துல்லா தலைமை தாங்கினார்.
செயலாளர்
பா.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
சங்க ஆலோசகர் மு.முருகேஷ் நிகழ்வினை
ஒருங்கிணைத்தார்.
கிராமிய பாடல்களை பெ.பார்த்திபன், இரா.அருண்குமார் ஆகியோர்
பாடினர்.
விழாவை அரவிந்த் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் எம்.எஸ்.தரணிவேந்தன் துவக்கி வைக்க, மத ஒற்றுமை உரையரங்கில் இலட்சுமணசுவாமிகள்,சு.அ.ஆதம்பாஷா, பக்த.தியாகராஜன் ஆகியோர் உரையாற்றினர்,
மதஒற்றுமைக்கான சமாதான புறாக்களையும் பறக்கவிட்டனர்.
இளைய வயதில் இசைத்திறமைகளின் சாதனை படைத்த சிறுவர்-சிறுமிகளுக்குப்
பாராட்டுச் செய்த திரைப்பட பாடலாசிரியர் அருண்பாரதி, ‘தமிழ்த்திரையும் கவிதை
இசையும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார்.
பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடத்தில்
முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளைப் பாராட்டிச் சான்றிதழ்களை வழங்கிய
பேராசிரியர் தி.மு.அப்துல் காதர், ‘தமிழ் எங்கள் உயிர்; ஒற்றுமை எங்கள் உறவு’ எனும்
தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது;
“நம் இந்திய தேசத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்து என பல மதங்கள் இருந்தாலும், நாம்
அனைவரும் இந்தியர் எனும் ஒற்றுமை உணர்வோடு சேர்ந்து நிற்க வேண்டும். அனைவரும்
கரம் கோத்து ஒன்றாக நின்றதினால்தான் நம் தேசம் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைபெற்றது. மதச்சார்ப்பில்லாத நாடு எனும் பெருமை இந்தியாவுக்கு உண்டு. மத நல்லிணக்கம்பேண வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
சாதியாய், மதமாய் நாம் பிரிந்திருந்தாலும் நம்மை தமிழ் எனும் மொழி ஒன்றிணைக்கும்
சக்தியாக விளங்குகிறது. ஆதிமொழியான தமிழில் சங்கக் காலந்தொட்டே அனைவரும்
சமம் என்கிற சிந்தனையை வலியுறுத்தும் படைப்புகள் படைக்கப்பட்டுள்ளன. தமிழ் எனும்
சிறப்புக்குரிய ஒரு மொழியின் மைந்தர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். அரசியல்
சூழ்ச்சிகள், தனிமனித வெறுப்புகள் இவற்றை அடையாளம் கண்டு, நாம் அனைவரும் ஒன்றென
சேர்ந்து நிற்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மதநல்லிணக்கமும் மக்கள்
ஒற்றுமையுமே நமது இந்திய தேசத்தின் பலமாக இருக்கிறது என்பதை அனைவரும் உணர
வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
டாக்டர் எஸ்.குமார், அரிமா மேனாள் ஆளுநர் வே.சோ.தளபதி, மாவட்ட தமிழ்ச் சங்க தலைவர் பா.இந்திரராஜன், தொழிலதிபர்அ.ஜ.இஷாக்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை மாணவக் கலைக்குழு அமைப்பினரின் பறையாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம்,
கரகாட்டம், கட்டையாட்ட்ம், நெருப்பாட்டம் ஆகியவை நடைபெற்றன. வந்தை கவிஞர்கள் இரா.நளினி,வந்தை பிரேம்,
சா.ரஷீனா, மொ.ஷாஜகான், எம்.பி.வெங்கிடேசன், ஜா.தமீம், எ.ராஜ்குமார்ஆகியோர்கவிதைகளை
வாசித்தனர்.
முன்னதாக, வந்தவாசி ஐந்து கண் பாலத்தில் தொடங்கிய மக்கள் ஒற்றுமை பேரணியை அரவிந்த் கல்வி நிறுவனங்களின் இயக்குநர்
எம்.எஸ்.தரணிவேந்தன் தொடங்கி வைத்த இந் நிகழ்வில்,வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார்,
கே.ஆர்.சீதாபதி, நகர்மன்றத் தலைவர் எச்.ஜலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர்கள் தமிழ்ராசா, கு.சதானந்தன் ஆகியோர் நிகழ்வைத் தொகுத்து வழங்கினர்.
நிறைவாக, சங்கப் பொருளாளர் ஏ.தேவா நன்றி கூறினார்.








Comments
Post a Comment