Skip to main content

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டம் பரபரப்பு!

அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சைகள் வெடித்திருக்கும் நிலையில், பொதுக்குழு கூட்டம் பரபரப்பு!

புறப்பட்ட ஓ.பி.எஸ், இ.பி.எஸ்!

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று காலை 9 மணிக்கு மேல் தொடங்க இருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தனது வீட்டில் இருந்து, ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் புறப்பட்டார். புறப்படும் முன்னர் வீட்டில் கோமாதா பூஜைகள் நடத்தப்பட்டது

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே  பழனிசாமி, தனது வீட்டில் இருந்து பூரண கும்ப மரியாதையுடன் புறப்பட்டார்.

அவருக்கு சாலையின் இருபுறமும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கூட்டம் நடைபெறும் வானகரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.

கூட்டம் நடக்கும் மண்டபத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து அதிமுக நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கிறார்கள். முறையான அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஜெயக்குமார்
ஓ.பி.எஸ் தரப்பு பொதுக்குழு தொடர்பாக தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான உத்தரவுக்குப் பின் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கிறோம்.

இது அதிமுக-வுக்கு பின்னடைவு கிடையாது. உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது குறித்து தலைமை முடிவெடுக்கும். ஒற்றை தலைமை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

வைத்திலிங்கம்
மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை அடுத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில்:

நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம். அதன்படி செயல்படுவோம். அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிபதிகள் எந்த தடையும் விதிக்கவில்லை. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பார்” என்றார்

சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்றது. விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடையில்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் கூடுதலாக, பொதுக்குழுவில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் ஆனால் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.

அந்த 23 தீர்மானங்களில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார். இதனை எடப்பாடி தரப்பினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வந்தனர்.

இதனிடையே சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் துரைசாமி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ளது.

பல்வேறு பரபரப்புக்கு இடையே இன்று காலை 10 மணி அளவில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்து பணிகளும் தற்போது முடிந்து சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபம் தயார் நிலையில் உள்ளது.

இங்கு வைக்கப்பட்டுள்ள அலங்காரங்களில் சிறப்பம்சமாக ஜெயலலிதா படத்துடன் கூடிய பாராளுமன்றம் போன்ற முகப்பு அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், வரலாற்று சிறப்புமிக்க அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் என தலைப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 2750 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில், மண்டபத்தில் மூன்று அரங்குகள் அமைக்கப்பட்டு, பொதுக்குழு உறுப்பினர்கள் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் தீவிர சோதனைக்கு பின்பே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அடையாள அட்டை இல்லாத எவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுக்கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்டார். அவருக்கு வழி முழுவதும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மகளிர் அணி சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...