Skip to main content

மின் கட்டண உயர்வு எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்! செஞ்சி மஸ்தான் விளக்கம்

மின் கட்டண உயர்வு  எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்! செஞ்சி மஸ்தான் விளக்கம்

மின் கட்டண உயர்வு எல்லாத்துக்கும் 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சிதான் காரணம்!  செஞ்சி மஸ்தான் விளக்கம்

தூத்துக்குடி:

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ள நிலையில், இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.

நமது அண்டை நாடான இலங்கையில் மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

இதனால் அங்கு அத்தியாவசிய பொருட்களுக்கும் கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், மக்கள் போராட்டமும் பல மாதங்களாகவே அங்குத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இலங்கைக்கு உதவி பொருட்கள்

இதனிடையே தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் உதவி பொருட்கள் அனுப்பி வருகிறது.

இதுவரை இரண்டு கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது. மூன்றாவது கட்ட நிவாரண பொருட்கள் வஉசி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் அனுப்பப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ‘இலங்கையில் பாதிக்கப்பட்டு இருக்கும் பொதுமக்கள் உதவ வேண்டும் என்ற தாயுள்ளதோடு தமிழக முதல்வர் சட்டமன்றத்திலே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ரூபாய் 123 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர் காக்கும் மருந்துகளும், ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர்களும் அனுப்பப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார்.

முதற்கட்டமாகச் சென்னையில் இருந்தும், இரண்டாம் கட்டமாகத் தூத்துக்குடியில் இருந்தும் உதவி பொருட்கள் அனுப்பப்பட்டன.

மூன்றாவது கட்டமாக நிவாரண பொருட்கள் வஉசி துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. தமிழக அமைச்சர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி கொடியசைத்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

கூடுதலாக உதவி பொருட்கள்
இப்போது ரூ. 174 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளது.

முதல்வர் அறிவித்ததைக் காட்டிலும் கூடுதலாகவே உதவித்தொகை பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதன் பின்னரும் நிவாரண பொருட்கள் வழங்கத் தமிழக அரசை இலங்கை கேட்டுக்கொண்டால், அதைப் பரிசீலனை செய்து நிவாரணப் பொருட்களை வழங்கத் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்து நாங்கள் யாரையும் இங்குக் கூப்பிடவில்லை. வந்தவர்களை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்றி வருகின்றோம்.

கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியில் சரியான நடவடிக்கை இல்லாததே வஃக்பு வாரிய சொத்துக்கள் ஆக்கிரமிப்பிற்கு ஒரே காரணம்!’ என்றார்.

தொடர்ந்து மின் கட்டண விவகாரத்தில் பாஜக, அதிமுக நடத்தும் போராட்டம் பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ‘இவர்கள் போராடுவது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் உள்ளது. மின் கட்டண உயர்வுக்குக் காரணம் கடந்த 10 ஆண்டுக்கால அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு தான் முழு காரணம்’ என்று தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...