Skip to main content

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், 7 அமைச்சர்கள் மட்டுமே 186.81 கோடி ரூபாய் வரை சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!     

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் வரிசையில் 7 வது அமைச்சராக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 58 கோடியே 44 லட்சம் ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணி, சி.விஜயபாஸ்கர், கே.பி அன்பழகன், தங்கமணி ஆகிய 6 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி கோடிக் கணக்கில் பணம், தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரை விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள 7 அமைச்சர்கள் மட்டுமே வருமானத்துக்கு அதிகமாக மொத்தம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தனது வருமானத்துக்கு அதிகமாக 6.11 கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்திருப்பதாகக் கூறி அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 22.07.2021 முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையில் 25 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்துக்கு அதிகமாக 51.09 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்ததாகக் கூறி உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 15.03. 2022 முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 11 கிலோ தங்கம், 118 கிலோ வெள்ளி, 84 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டு 34 லட்சம் ரூபாயை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 27.78 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாகக் கூறி அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு செய்து கடந்த 16.09 2021 அன்று அவருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி 4.987 கிலோ தங்கம், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளி, 34 லட்சம் ரொக்கம், 9 சொகுசுக் கார்கள் உள்பட சொத்து ஆவணங்கள், 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 1 கோடியே 80 லட்சம் அந்நிய செலாவனியாக முதலீடு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அடுத்ததாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்துக்களை குவித்ததாகக் கூறி அவர் மற்றும் அவரது மனைவி ரம்யா அகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 18.10.2021 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், 4,870 கிராம் தங்க நகைகள், 136 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்கள், சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் 11 கோடியே 32 லட்சம் ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாகக் கூறி அவர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடந்த 21.1.2022 அன்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி 2 கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம், 6.63 கிலோ தங்கம், 13.85 கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் தங்கமணியும் வருமானத்துக்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் சொத்துக்கள் குவித்துள்ளதாகக் கூறி அவர் உட்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 15.12.2021 அன்று சோதனை நடத்தினர்.

சோதனையில் 2 கோடியே 16 லட்சம் பணம், 1.13 கிலோ தங்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு உள்ளான 7 அமைச்சர்களும் சேர்த்து மொத்தமாக 186.81 கோடி ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளது தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல சோதனை நடைபெற்ற 6 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 6 கோடியே 70 லட்சம் பணம், 28.61 கிலோ தங்கம், 140 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள் மற்றும் சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் தொடர்பாக மொத்தம் 7 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது 811 கோடி ரூபாய்க்கான டெண்டர் முறைகேடு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது 7வது முன்னாள் அ.தி.மு.க அமைச்சரான காமராஜுக்குச் சொந்தமான இடங்களில் நடைபெறும் சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத பணம், நகை எந்த அளவில் பறிமுதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...