சோனியா காந்தியிடம் 2 மணி நேர விசாரணை மீண்டும் 25 – ந்தேதி ஆஜராக சம்மன்!

சோனியா காந்தியிடம் 2 மணி நேர விசாரணை மீண்டும் 25 – ந்தேதி ஆஜராக சம்மன்!
நேஷனல் ஹெரால்டு
வழக்கில் கடந்த 8-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆஜராகும்படி சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் அந்த சமயத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. சோனியா கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக மீண்டதையடுத்து இன்று ஜூலை21 விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள்.
அதன்படி இன்று மதியம் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அவருடன் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரும் உடன் சென்றனர்.
அவரிடம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வாங்கியதில் நடந்த பண பரிமாற்றம் தொடர்பாக அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டனர்.
அதற்கு சோனியாகாந்தி பதில் அளித்தார்.
இன்றைய விசாரணை நிறைவடைந்ததையடுத்து சோனியா காந்தி புறப்பட்டுச் சென்றார்.
சோனியா காந்தியிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் 25 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது
விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் 4 மணிக்கு பிறகு நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.க்களின் போராட்டத்திற்கு பதிலளித்த பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சட்டம் அனைவருக்கும் சமம் சோனியா காந்தி என்ன ஒரு சூப்பர் மனிதரா? என கேள்வி எழுப்பினார்.
Comments
Post a Comment