தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி

தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி
Chess Olympiad 2022: விளையாட்டில்
தோற்றவர்கள் இல்லை. இங்கே வெற்றியாளர்களும் இருக்கிறார்கள், எதிர்கால வெற்றியாளர்களும் இருக்கிறார்கள் – பிரதமர் மோடி
தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இதனாலேயே இது இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
தமிழில் வணக்கம் என்று கூறி, தமது உரையை தொடங்கிய பிரதமர்,
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர்,
‘தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது.இதனாலேயே இது இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது.
இந்தியாவின் பல செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. இது சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்தின் பிறப்பிடமாக உள்ளது
இளைஞர்களின் ஆற்றல் மற்றும் சூழலை செயல்படுத்துதல் ஆகிய முக்கியமான காரணிகளின் சரியான கலவையின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருகிறது, விளையாட்டில் தோற்றவர்கள் இல்லை.
இங்கே வெற்றியாளர்களும் இருக்கிறார்கள், எதிர்கால வெற்றியாளர்களும் இருக்கிறார்கள். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இங்கு கூடியிருக்கும் அனைத்து அணிகள் மற்றும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
விளையாட்டில் திறமையை ஊக்கப்படுத்துவதும் விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் முக்கியமானதுவிளையாட்டுக்கள் அழகானவை, அனைவரையும் ஒன்றுபடுத்தும் அற்புதமான சக்தியை அது கொண்டிருக்கிறது. நாம் ஒன்றுபட்டு இருக்கும்போது நாம் வலுவாக இருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு இருக்கும்போது நாம் சிறப்பாக இருக்கிறோம். விளையாட்டுக்கள் மூலம் இது நிகழ்கிறது.
நமது கலாச்சாரத்தின் விளையாட்டுக்கள் தெய்வீகமாக கருதப்படுவதால் அழகிய சிற்பங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்கள் பல விளையாட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன. எனவே 44-வது செஸ் ஒலிம்பியாட் இங்கே நடைபெறுவது மிகவும் பொருத்தமானது.
இந்த முறை 44-வது செஸ் ஒலிம்பியாட் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜோதி தொடர் ஓட்டத்துடன் தொடங்கியுள்ளது.
எப்போதும் தொடர் ஓட்டம் இந்தியாவிலிருந்து தொடங்குவது பெருமைக்குரிய விஷயமாகும்.
இந்தியாவில் தற்போது இருப்பதைவிட சிறப்பான நேரம் முன் எப்போதும் இருந்தது இல்லை என்பதை பகிர்ந்துகொள்ள நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.
Comments
Post a Comment