Skip to main content

தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி

தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி

தமிழகம் இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது – பிரதமர் நரேந்திர மோடி

Chess Olympiad 2022: விளையாட்டில்  

 தோற்றவர்கள் இல்லை. இங்கே வெற்றியாளர்களும் இருக்கிறார்கள், எதிர்கால வெற்றியாளர்களும் இருக்கிறார்கள் – பிரதமர் மோடி

தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது என்றும் இதனாலேயே இது இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய – மாநில அமைச்சர்கள், சர்வதேச செஸ் அமைப்பின் பிரதிநிதிகள், நடிகர்- நடிகைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழில் வணக்கம் என்று கூறி, தமது உரையை தொடங்கிய பிரதமர்,

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு” என்ற திருக்குறளையும் மேற்கோள்காட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர்,

‘தமிழகம் சதுரங்கத்துடன் வலுவான வரலாற்றுத் தொடர்பைக் கொண்டுள்ளது.இதனாலேயே இது இந்தியாவின் சதுரங்க சக்தியாக விளங்குகிறது.

இந்தியாவின் பல செஸ் கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. இது சிறந்த மனம், துடிப்பான கலாச்சாரத்தின் பிறப்பிடமாக உள்ளது

இளைஞர்களின் ஆற்றல் மற்றும் சூழலை செயல்படுத்துதல் ஆகிய முக்கியமான காரணிகளின் சரியான கலவையின் காரணமாக இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் வலுவடைந்து வருகிறது, விளையாட்டில் தோற்றவர்கள் இல்லை.

இங்கே வெற்றியாளர்களும் இருக்கிறார்கள், எதிர்கால வெற்றியாளர்களும் இருக்கிறார்கள். 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு இங்கு கூடியிருக்கும் அனைத்து அணிகள் மற்றும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

விளையாட்டில் திறமையை ஊக்கப்படுத்துவதும் விளையாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பில் முதலீடு செய்வதும் முக்கியமானதுவிளையாட்டுக்கள் அழகானவை, அனைவரையும் ஒன்றுபடுத்தும் அற்புதமான சக்தியை அது கொண்டிருக்கிறது. நாம் ஒன்றுபட்டு இருக்கும்போது நாம் வலுவாக இருக்கிறோம். நாம் ஒன்றுபட்டு இருக்கும்போது நாம் சிறப்பாக இருக்கிறோம். விளையாட்டுக்கள் மூலம் இது நிகழ்கிறது.

நமது கலாச்சாரத்தின் விளையாட்டுக்கள் தெய்வீகமாக கருதப்படுவதால் அழகிய சிற்பங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள பல கோவில்கள் பல விளையாட்டுக்களை பிரதிநிதித்துவம் செய்கின்றன. எனவே 44-வது செஸ் ஒலிம்பியாட் இங்கே நடைபெறுவது மிகவும் பொருத்தமானது.

இந்த முறை 44-வது செஸ் ஒலிம்பியாட் முன் எப்போதும் இல்லாத வகையில் ஜோதி தொடர் ஓட்டத்துடன் தொடங்கியுள்ளது.

எப்போதும் தொடர் ஓட்டம் இந்தியாவிலிருந்து தொடங்குவது பெருமைக்குரிய விஷயமாகும்.

 இந்தியாவில் தற்போது இருப்பதைவிட சிறப்பான நேரம் முன் எப்போதும் இருந்தது இல்லை என்பதை பகிர்ந்துகொள்ள நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பேசினார்.


Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...