Skip to main content

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கி. வீரமணி வாழ்த்து

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கி. வீரமணி வாழ்த்து

சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும் – புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு கி. வீரமணி வாழ்த்து

ஒடுக்கப்பட்ட (பழங்குடி) சமூகத்தில்

 பிறந்த முதல் பெண் குடியரசுத் தலைவராக முதன் முதலாக வந்திருப்பதற்கு திரௌபதி முர்முவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்:

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள, சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்புகளுக்கு ஊறு ஏற்படாமல் கட்டிக் காக்க வேண்டும்

இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவராக மேதகு திரவுபதி முர்மு அவர்கள், இன்று (25.7.2022) காலை பதவியேற்றிருப்பது, இந்திய வரலாற்றில் இது ஒரு திருப்பம்.

தடைகள் பல கடந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து முதல் குடியரசுத் தலைவராக வந்துள்ள முதல் பெண்ணைப் பாராட்டி மகிழ்கிறோம்!

பழங்குடி வகுப்பில் பிறந்து, பல்வேறு துன்பங்கள், இடர்ப்பாடுகள்  இவற்றையெல்லாம் தாண்டி, இவர் பல் வேறு பதவிகளை – ஆளுநர் உள்பட பார்த்த நிறைந்த அனுபவத்தோடு ‘‘நாட்டின் முதல் குடிமகள்” என்ற பெருமையான பதவிக்கு வந்திருப்பது, சமூகநீதியாளர்கள் அனைவரையும் மகிழ வைப்பதாகும் – அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

தொடக்கத்தில் இவரது தேர்வும், வேட்பு மனுவும் ஒரு அரசியல் யுக்தியினால் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வினால் திட்டமிட்டு களம் இறக்கப்பட்ட ஒன்று என்ற போதிலும்கூட, 5 ஆண்டுகால பதவி வகிக்கும் அவர் அப்பெரும் பதவியின் மாண்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தத்துவங்களையும், மதிப்பீடுகளையும், விழு மியங்களையும் காப்பாற்றுவது என்று அவர், பதவியேற் பின்போது எடுத்துள்ள உறுதிமொழியைக் காப்பாற்றி, எப்பொழுதும் அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய இலக்குகளான ‘‘இறையாண்மைமிக்க, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசின்” தத்துவங்களுக்கு ஊறுநேராத வண்ணம் தக்க விழிப்புடனும், விவேகத்துடனும் கடமையாற்றி, வரலாற்றில் சமூகநீதி பங்களிப்பில் ஒரு தனி முத்திரை பதிக்கத் தயங்கக் கூடாது என்பதே நாட்டு மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் ஆகும்!

தேர்தலுக்குமுன் அவர் ஒரு அணியின் வேட்பாளராகவே பார்க்கப்பட்டார்.

சனாதனம் பேசுவோர் கற்கவேண்டிய பாடம்.

தேர்தல் முடிவு – அமோக வெற்றிக்குப் பின், அவர் அனைவருக்கும் பெருமைமிக்க மேதகு மாண்பமை குடியரசுத் தலைவர் – நாட்டின் தனிச் சிறப்புப் பெற்ற முதல் குடிமகள் – இந்தியாவின் முப்படைகளின் முதன்மையான தனிப்பெரும் தளபதி – (அரசமைப்புச் சட்டப்படி)யாவார் என்றே பார்க்கப் படுகிறார்!

இப்படியொரு பெண், முதன்மை இடத்தைப் பெற்றிருப் பதன்மூலம், சனாதனம் பேசுவோர் கற்கவேண்டிய சில முக்கிய பாடங்களும் உண்டு.

பெண் – ஆணுக்கு நிகரானவர்!

பெண்ணும் ஆணுக்குச் சமமான தகுதியும், திறமை யும்,  ஆற்றலும் பெற்றவர்; அவர்களைப் புறக்கணித்து வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டி வைக்கச் சொன்ன செல்லரித்த பழைய வர்ண மத  சனாதனங்களுக்கு இது மரண அடி! கால மாறுதல் என்ற வெள்ளத்தின் – வேகத்தின் முன் என்னதான் காவிகள் சனாதன  சத்சங் தத்துவார்த்த பிரச்சாரம் – மாறாதது என்று ஓங்காரக் கூச்சலிட்டாலும், ‘மாறும், மாறும், மாறியே தீரும்’ என்ற பகுத்தறிவு வளர்ச்சித் தத்துவம்தான் இறுதியில் வெற்றியடையும் என்பதன் முழு முதற் பொருளாக நாட்டின் தலைவரே – அதுவும் ஒரு ஒடுக்கப்பட்ட சமுதாயப் பெண்மணி – தன்னை முழுத் தகுதியாக்கி யுள்ளார் என்பது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

‘சதி மாதா கோவில்’ கட்டடம் – சனாதனம் வீழ்ந்தது!

சுமார் 150 ஆண்டுகளுக்குமுன் எந்தப் பெண் சமுதாயத்திற்கு ‘சதி மாதாக் கோவில்’ கட்டிய சனாதனம் மாற்றப்பட்டு, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களே அழைத்து அவர்களை அமர வைக்கும் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது!

இதில் தத்துவ ரீதியான வெற்றி யாருக்கு என்பதை உலகம் எண்ணிப் பார்த்து புரிந்துகொள்ளும் என்று நினைக்கிறோம்.

அரசியல் ரீதியாகவே அவருக்குப் போட்டி இருந்ததே தவிர, அது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் அல்ல – அந்தப் போட்டி என்பது எவருக்கும் விளங்கும்!

அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றைக் கட்டிக் காப்பாற்றிட வேண்டும்!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அவர் குடியரசுத் தலைவர் என்பதால், அவர் அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கேற்ப தனது சீரிய கடமைகளை ஆற்றி, சிறந்த முறையில் முத்திரைப் பதிக்க வேண்டும் என்ற விழைவை திராவிட மண் – சமூகநீதி மண் – எப்போதும் ஜனநாயகம் காக்கும் பாசறையான தமிழ்நாடு அவரை வாழ்த்தி மகிழ்கிறது!

குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, எங்கெங்கும் சமூகநீதி கலந்த பாலியல் நீதியும்  (Gender Justice Combined with Social Justice) மதச்சார்பின்மை, ஜனநாயக மாண்பு மனித உரிமைகளும், சமத்துவ சம வாய்ப்புகளும் பாதுகாக்கப்பட அவரது ஆளுமை ஒரு தடுப்பூசி போன்று பாதுகாப்பாக அமையட்டும்!

வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!!” என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...