Skip to main content

புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரி பட்ஜெட் 2022-23.. சாமானியர்களுக்கு பயனுள்ள 5 முக்கிய அறிவிப்புகள்!

புதுச்சேரி மாநிலத்தில் நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை, நிதித்துறை பொறுப்பினை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

புதுச்சேரியில் கடந்த 10 தேதியே பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் காலவரையின்றி பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் நீண்ட இழுபறி நிலைக்கு மத்தியில் , மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. ஒப்புதலுக்கு பிறகு நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் துறை வாரியாக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.

இதில் சில அறிவிப்புகள் புதுச்சேரி மக்களிடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளன. குறிப்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்ற அறிவிப்பு வெளியானது.

இது குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதன் மூலம் பெண்கள் குறைந்தபட்சம் வாழ்வாதாரங்களை பெற முடியும் என நம்பப்படுகிறது. எனினும் இந்த உதவித் தொகையானது 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிகளுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி சுற்றுலா துறை
கல்வி மற்றும் சுற்றுலா துறைகளில் புதுச்சேரியினை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. கடுமையான சவால்கள் நிலவி வந்தாலும், பல நல திட்டங்களை புதுச்சேரி அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக புதுச்சேரி முதலைமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

கல்வித் துறைக்கு என்ன?
 
குறிப்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு 802 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் மேன்மைபடுத்தப்பட்ட வசதிகளுடன் கூட வகுப்புகள், இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலை கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவக்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

மாணவர்களுக்கு லேப்டாப்
மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 9 ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட சைக்கிள்கள் மீண்டும் வழங்கப்படும்.

விவசாயத் துறை கால் நடை
விவசாயிகளின் நலன் கருதி எளிதில் விவசாயிகள் தேவையான உரங்களை பெற, காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே கால் நடைகளின் சுகாதாரத்திற்காக மாநிலத்தில் நடமாடும் கால்நடை மையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் ஒரு மருத்துவ கல்லூரி துவங்கப்படும், புதிதாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

இது தவிர புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.

இதற்கான தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்றும் முதலமைச்சர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கடற்பகுதியில் மிதக்கும் படகுதுறை அமைக்கப்படும். சென்னை புதுச்சேரி இடையில் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் புதுச்சேரி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் அரிய வகை ஆலீவ் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடன் வாழ் உயிரினங்களை பாதுகாக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோயில் சொத்துகளை பராமரிக்க முடியும். மோசடிகளை தவிர்க்க முடியும் என நம்பப்படுகிறது.

நிதி திரட்ட அனுமதி
மத்திய அரசு உதவி தொகையாக 1,729 கோடி ரூபாய் வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாயும், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் நிதியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர புதுச்சேரி அரசு 1,889 கோடி ரூபாய் கடன் திரட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற முக்கிய அறிவிப்புகள்
மின்சார துறைக்கு 1,596 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த துறைக்கு ரூபாய் 31.05 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.

காவல் துறையினரை ஊக்குவிக்கும் விதமாக காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கப்படும்.

அனைத்து காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையம் துவங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

பாரதியார் பல்கலைக்கூடத்தில் 16.18 கோடி ரூபாய் மதிப்பிலான தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும். மேலும் வாடகை கட்டிடங்களில் செயல்பட்டு நூலகங்கள், அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...