Skip to main content

வருகிற 29 ம் தேதி கூடலூருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வாருங்கள் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

வருகிற 29 ம் தேதி கூடலூருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வாருங்கள் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

வருகிற 29 ம் தேதி கூடலூருக்கு வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வாருங்கள் – தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ்
 தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி வாக்கு வங்கி அரசியல் மூலம் ஆதாயம் தேடி வருகிற பா.ஜ.க.வுக்கு எதிராக மக்களை ஒன்று படுத்துகிற முயற்சியில் இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக தலைவர் ராகுல் காந்தி நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் தொடங்கிய முதற்கட்ட நடைப் பயணம் 59 கி.மீ., கன்னியாகுமரி மாவட்டத்திலும், அதன் பின்னர் 450 கி.மீ., கேரள மாநிலத்தை கடந்து வருகிற 29-ந்தேதி தமிழக பகுதியிலுள்ள நீலகிரி மாவட்டத்தில் கூடலூருக்கு தலைவர் ராகுல் காந்தி பயணத்தை மேற் கொள்ள இருக்கிறார்.

வருகிற 29-ந்தேதி மாலை 4 மணிக்கு கூடலூர் ஆமைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகில் உள்ள கோழி பாலத்திலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்கிறார்.

ஏறத்தாழ 6 கி.மீ. பயணத்தை மேற்கொண்டு கூடலூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்து அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

கூடலூர் பகுதியில் உள்ள படுகர் இன மக்களையும் அங்கே வாழ்கிற மொழி சிறுபான்மை மக்களையும் நேரடியாகச் சந்திக்கிற வாய்ப்பு அவருக்குக் கிட்டியிருக்கிறது. இதன்மூலம் கூடலூர் பகுதிக்கு மிகப்பெரிய பெருமை கிடைத்திருக்கிறது.

எனவே, தலைவர் ராகுல் காந்தி கூடலூர் நடைப் பயணம் வெற்றி பெற நீலகிரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மட்டு மல்லாமல் சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக அணி திரண்டு பங்கேற்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...