Skip to main content

அக். 2- சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு!

அக். 2- சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு!

அக். 2.சமூகநல்லிணக்க மனிதச்சங்கிலி 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு!

தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கேஎம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதை வரவேற்கின்றோம்.

ஒன்றிய பாஜக அரசுகொண்டுவந்துள்ள தேசியபுலனாய்வு முகமை என்ஐஏ சட்டத்தை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்த நிலையிலிருந்தே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்ததோடு என்ஐஏ சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் என எச்சரிக்கையும் செய்தனர்.

அமைதிப் பூங்காவான தமிழகத்தில் தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் தொடர்ச்சியாக என்ஐஏ சட்டத்தைப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதே நேரத்தில் விசாரணையின் முடிவுக்கு முன்பாகவே ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை காயப்படுத்தி செய்திகள் வெளியிடப்படுகின்றது. இதன் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தினர் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ந் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் தமிழகத்தில் 50 இடங்களில் எந்த நோக்கமும் அறிவிக்கப்படாமல் அணிவகுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தந்தை யை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும். இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்களே காந்தி பிறந்ததினத்தில் தமிழகத்தில் முதன்முறையாக அணிவகுப்பை நடத்த இருப்பதும், பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

சமூக நல்லிணக்கம் தழைக்க வேண்டும். சகோதரத்துவம் நிலைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு மார்ச்சிஸ்ட் சம்யூனிஸ்ட்டு கட்சி(சிபிஎம்). இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் அக்டோபர் 2 ந் தேதி மாலை 4.மணிக்கு நடைபெறும் தமிழகம் தழுவிய சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முழுஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.

கட்சியின் மாநில, மாவட்ட, நகர, நிர்வாகிகள், முஸ்லிம் மாணவர் பேரவை, இளைஞர் அணி, தொழிலாளர் யூனியன், மகளிரணி, தகவல் தொழில்நுட்ப அணி. கேஎம்சிசி உள்ளிட்ட அணிகளின் பொறுப்பாளர்கள் மனித சங்கிலியில் திரளாகப் பங்கேற்றிட கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு பேராசிரியர் கேஎம் காதர் மொகிதீன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...