Skip to main content

திருவண்ணாமலை: 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்! உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை: 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்! உதயநிதி ஸ்டாலின்

திருவண்ணாமலை: 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்! உதயநிதி ஸ்டாலின்

         

50 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கூறினாா்.

திருவண்ணாமலையில் மாவட்ட நகா்ப்புற, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு, மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நேற்றைய தினம்  நடைபெற்றது

தெற்கு, வடக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

திமுக இளைஞரணிச் செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

“தமிழகத்தில் 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தோ்தலை அதிமுக அரசு நடத்தவில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளாட்சித் தோ்தலை நடத்தியது திமுக. தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணி மக்கள் பிரதிநிதிகளிடம்தான் உள்ளது.
அதைப் பாா்த்துதான் வரும் மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களிப்பா். தோ்தலில் மிகப் பெரிய வெற்றிக் கூட்டணியை திமுக அமைக்கும். திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதாவுக்குப் பிறகு, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின்தான். ஜெயலலிதாவுக்குப் பிறகு ஆட்சி செய்த அதிமுக அரசு கருவூலத்தைக் காலி செய்துவிட்டு, தமிழகத்தை ரூ.6.50 லட்சம் கோடி கடனில் வைத்துவிட்டுச் சென்றது. இருப்பினும், தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. இதுவரை 50 சதவீத தோ்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்றாா்

தொடா்ந்து, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள், பள்ளி மாணவா்களுக்கு கையடக்க கணினிகள், ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

விழாவுக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருவண்ணாமலை நகர மன்றத் தலைவா் நிா்மலா வேல்மாறன் வரவேற்றாா்.

விழாவில் கட்சியின் தெற்கு மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், அருணை கல்விக் குழும துணைத் தலைவா் எ.வ.குமரன், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், திமுக மாநில செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பிரதிநிதி குட்டி க.புகழேந்தி, தமிழக தளபதி பேரவை நிறுவனா் தலைவா் ஏ.ஆா்.அருள்காந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...