Skip to main content

‘ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்’ – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன்

‘ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்’ – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன்

‘ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்’ – வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன்

ஆளுநர் அவர் வகிக்கும் பதவியை

 மறந்து ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி விமர்சித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கடலூருக்கு வந்திருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது:

‘குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் விழுந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் குஜராத் அரசும், மத்திய அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கோவையில் நடந்த சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் வகிக்கும் பதவியை மறந்து ஆளுநரே ஆர்எஸ்எஸ் தொண்டராக செயல்படுகின்றார்.

ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார்.

மதவாத அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை. சிலிண்டர் விபத்து தொடர்பாக உளவுத்துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை என்று அரசுக்கு களங்கம் விளைவிக்கவே பாஜகவினர் இது போன்று பேசி வருகின்றனர்.

இதற்காக பாஜகவை கடுமையாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கின்றது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கின்றது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலைக்கு விளம்பரமேனியா உள்ளது.

தனிநபர் பெயரை உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரிகமானது. ‌அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். காசுகொடுத்து கூட்டம் கூட்டி பாஜக கூட்டம் போட்டு போய் உள்ளனர்.

கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு, மாவட்டத்தின் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் என்னை குறித்து அவதூறாக பேசி இருப்பதை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்தியை மத்திய அரசு திணிக்கிறது. ஆங்கிலத்தை யார் திணிப்பது? பாஜக சொல்வது வேடிக்கையாக உள்ளது.

இந்தி திணிப்பு என்பது மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றிவிட்டனர். 70 சதவீதம் மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர்.

அதிகம் இந்தி உள்ள மாநிலங்களில் இம்முடிவு எடுக்கலாம்.மற்ற மாநிலங்களில் இதை திணிப்பதை ஏற்கமுடியாது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து எனது தலைமையில் நாளை நவ.1 சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது’ இவ்வாறு கூறினார்.

வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...