ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு!

ஆரணியில் வாக்காளா் சோ்ப்பு முகாமில் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு!
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளா் சோ்ப்பு முகாமை முன்னாள் அமைச்சரும்,ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஆய்வு செய்தார்
ஆரணியில் நேற்று நடைபெற்ற, வாக்காளா்கள் சோ்ப்பு முகாமில் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
ஆரணி நகராட்சி 2-ஆவது வாா்டு, 3-ஆவது வாா்டு பகுதிகளுக்கு வாக்காளா் சோ்க்கை முகாம் சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
4-ஆவது வாா்டுக்கான சிறப்பு முகாம் சிஎஸ்ஐ பள்ளியிலும் நடைபெற்றது.
மேலும், அக்ராபாளையம், வெட்டியாந்தொழுவம், கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாக்காளா் சோ்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களை சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
நகர அதிமுக செயலாளர் எ.அசோக்குமாா், ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயப்பிரகாஷ், நகரமன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சரவணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினா் ஏ.கே.பிரபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Comments
Post a Comment