Skip to main content

யாரு விரட்டறாங்களோ இல்லயோ ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: தொல் திருமாவளவன்

யாரு விரட்டறாங்களோ இல்லயோ ஆர்எஸ்எஸ்ஸை நாங்க விரட்டுவோம்: தொல் திருமாவளவன்

சென்னை: 

யாரும் பாஜக கட்சியில் கூட இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான இயக்கம்.

தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள். அவர்களை யார் விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்  திருமாவளவன் சூளுரைத்துள்ளார்.

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் ரவி, ஆளுநர் உரையில் இருப்பதை படிக்காமல் விட்டுவிட்டார்.

மேலும், தன்னிச்சையாக தன்னுடைய கருத்துக்களை பேசியிருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின், உடனே எழுந்து ஆளுநர் பேசிய தனிப்பட்ட கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்கக்கோரி தனித்தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்

இதையடுத்து ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து உடனடியாக வெளிநடப்பு செய்தார்.

முன்னதாக, ஆளுநர் உரையை கண்டித்து திமுக கூட்டணியை கட்சியினர் சட்டப்பேரவைக்குள்ளேயே முழக்கமிட்டனர். அந்த முழக்கத்தையும் மீறி ஆளுநர் ரவி தன்னுடைய சொந்த கருத்தை பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆளுநரை கண்டித்தும் அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் விசிக இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தியது

இந்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா கலந்து கொண்டனர்.

மேலும், திரைப்பட இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் கட்சி நிர்வாகிகள் விசிக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற திருமாவளவன் எம்பி உள்பட 500 க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் அழைத்து செல்லப்பட்டனர்.

திருமாவளவனின் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

முன்னதாக, முத்தரசன் பேசும்போது:

ஆளுநராக பொறுப்பேற்றபோது தமிழ்நாடு ஆளுநராகிய நான் என்று தானே பொறுப்பேற்றார். ஆனால் இப்போது தமிழ்நாடு வேண்டாமா?

சென்னாரெட்டி
தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதித்தது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்களின் பெயர்களை உச்சரிக்க மறுத்தது போன்ற ஆளுநரின் செயலானது மிகவும் கண்டிக்க கூடிய செயலாக அமைந்திருந்தது.

இப்போதுகூட ஆளுநர் எதுக்காக டெல்லிக்கு போய் இருக்கிறார் என்று தெரியவில்லை  ஒருவேளை, மோடி, அமித்ஷாவை சந்தித்து, 'நீங்கள் சொன்ன மாதிரியே நான் தமிழ்நாட்டில் செயல்பட்டு கொண்டிருக்கின்றேன் ஆனால் தனக்கு வரும் எதிர்ப்பினால் என்ன செய்வதென்று தெரியவில்லை' என்று சொல்ல தான் டெல்லிக்கு சென்றிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

வடிகட்டிய ஆர்எஸ்எஸ்

இதையடுத்து, திருமாவளவன் பேசம்போது, மம்தா பானர்ஜியும் ஆளுநர் இல்லாமல் சட்டசபையை நடத்தி காட்டி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் சென்னாரெட்டி இல்லாமலேயே சட்டப்பேரவையை ஜெயலலிதா அம்மையாரும் நடத்தி காட்டி உள்ளார். எனவே, ஜெயலலிதா போல, தற்போதும் ஆளுநர் இன்றி சட்டப்பேரவையை நடத்த வேண்டும்.

வடமாநிலங்களில் 4, 5 முறை தேர்தலில் வெற்றியை பெற்றும், இங்கே தமிழகத்தில் 10 பேரைகூட தமிழக சட்டசபைக்கு பாஜக வால்  அனுப்ப முடியவில்லை.

அந்த அளவுக்கு தமிழ்நாடு, பாஜக  அரசியலுக்கு எதிரான இறுக்கத்தை கொணடிருக்கிற ஒரு மாநிலம். அவர்களின் அரசியல் இங்கே எடுபடாத அளவுக்கு திராவிட அரசியல் என்பது ஆளுமை செலுத்துகிறது.

திராவிட அரசியலை திமுக. அதிமுக என்று மட்டும் பார்த்துவிட கூடாது.

ஆளுநர் சட்டசபையில் செய்த செயல் மட்டும் பிரச்சனை இல்லை. இவர் தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ஆனதுதான் தான் முக்கிய பிரச்சனையே. ஆளுநர் ஒரு வடிகட்டிய ஆர்எஸ்எஸ் தொண்டர். அவர் பேசும் அனைத்து அரசாங்க நிகழ்ச்சிகளிலும் சனாதனம் என்பது ஒலித்து கொண்டே இருக்கிறது..

ஆளுநருக்கான தனி அதிகாரம் கிடையாது, தமிழ்நாடு அரசாங்கத்திற்கு கீழ் தான் அவரது செயல் இருக்க வேண்டும்.. ஆளுநராக நியமிக்கபட்டவர் அரசியல் கட்சியாளராக செயல் படக்கூடாது. ஆனால் அவர் முழுமையாக அரசியல்வாதியாக மட்டும் தான் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். யார் வேண்டுமானாலும் பாஜக கட்சியில் இருக்கலாம், ஆனால் ஆர்எஸ்எஸ் தொண்டனாக மட்டும் இருக்கவே கூடாது. ஏனென்றால், அது ஒரு ஆபத்தான இயக்கம் தமிழ்நாட்டை பாஜக குறி வைத்து விட்டார்கள் யார் அவர்களை விரட்டுகிறார்களோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக விடுதலை சிறுத்தைகள் விரட்டும் என்றார் திருமாவளவன்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...