செய்யாறு அரசுக் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டடம் திறப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மின்னணு நூலகக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்ததைத் தொடா்ந்து, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் ரூ. ஒரு கோடியில் கட்டப்பட்ட மின்னணு நூலகக் கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தாா்.
இந்தக் கல்லூரியில் கிராமப் பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 8,216 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில், இவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் விதமாக, 2022 - 23ஆம் கல்வியாண்டில் ருசா திட்டத்தின் கீழ் நூலகா் அறை, படிப்பகம், பாதுகாப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் 376.30 சதுர மீட்டா் பரப்பளவில் நூலகக் கட்டடம் கட்டப்பட்டது.
இதை தமிழக முதல்வா் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, நூலகத்தில் கல்லூரி முதல்வா் (பொ) சிதா.ரவிச்சந்திரன் முன்னிலையில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி குத்துவிளக்கு ஏற்றி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், ஒன்றியக் குழுத் தலைவா்கள் டி.ராஜி (வெம்பாக்கம்), திலகவதி ராஜ்குமாா் (அனக்காவூா்), திருவத்திபுரம் நகரமன்றத் தலைவா் ஆ.மோகனவேல், கீழ்ப்புதுப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சுகன்யா பாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
Comments
Post a Comment