Skip to main content

நான் உயிருடன் இருக்கும்வரை இரட்டை இலைக்கு ஆபத்து இல்லை - சசிகலா

நான் உயிருடன் இருக்கும்வரை இரட்டை இலைக்கு ஆபத்து இல்லை - சசிகலா

தஞ்சாவூர் :

இரட்டை இலை சின்னத்தை எந்தக் காலத்திலும் எதுவும் செய்ய முடியாது, நான் உயிருடன் இருக்கும் வரை அதற்கு ஆபத்து வரவிடமாட்டேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா இதனைத் தெரிவித்துள்ளார்.

பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த சசிகலா, என்னை எல்லாம் யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் விமர்சித்துள்ளார் சசிகலா.

செய்தியாளர்களைச் சந்தித்த வி.கே.சசிகலா பேசுகையில்:

அரசால் என்ன செய்ய முடியுமா அதைத்தான் நாங்கள் வாக்குறுதியாகக் கொடுப்போம். கடந்த தேர்தலின்போது 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும், ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன் எனக் கூறினார்.

ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. நான் நினைக்கிறேன் சாவி தொலைந்து போய்விட்டது போல. சாவி இருந்திருந்தால் இந்நேரம் திறந்திருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

அதிமுக பிளவுபட்டு போனதற்கு பாஜகதான் காரணமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா,

'நான் ஒன்றை மட்டும் சொல்கிறேன். நாம் சரியாக இருந்தால் அடுத்தவர்களைக் குறை சொல்லத் தேவையில்லை. நாம் என்ன ஒரு மாத கைக்குழந்தையா நம்மை அவர்கள் கட்டுப்படுத்தவும், ஏமாற்றுவதற்கும்? நாம் சரியாக இல்லாமல் இன்னொரு கட்சியை குறை சொல்வது நாம் போகாத ஊருக்கு வழி சொல்வது போல இருக்கிறது.

தொடர்ந்து பேசுகையில், யாராலும் எதுவும் செய்ய முடியாது. என் நிழலை கூட அவர்களால் நெருங்க முடியாது. இரட்டை இலை சின்னத்தை எந்த காலத்திலும் யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விட மாட்டேன்' எனத் தெரிவித்தார்.

திமுகவுக்கு உதவும்
ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு தரப்பினரும் மாற்றி மாற்றி விமர்சித்து வருவது பற்றிப் பேசிய சசிகலா, 'இவர்கள் பேசுவதை எல்லாம் பார்க்கும்போது, அது திமுகவுக்கு உதவுவதாகவே இருக்கிறது. எனவே ஒருத்தரை ஒருத்தர் திட்டுவதை விட்டுவிட்டு, ஒழுங்காக இணைந்து, தீய சக்தி திமுகவை வீழ்த்த கைகோர்க்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள், எங்கள் கட்சித் தொண்டர்களின் வேண்டுகோள்.' எனத் தெரிவித்தார்.

யாருக்கு ஆதரவு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி தனியாகவும், ஈபிஎஸ் அணி தனியாகவும், அமமுக தனியாகவும் களமிறங்குகிறது. இவர்கள் மூவரில் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் எனது முடிவு. அதிமுக தொண்டர்களின் மனக் குமுறல் என்ன என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார்.

நிச்சயம் நடக்கும்
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, வாய்ப்பு என்று கேட்க வேண்டாம், நிச்சயம் நடக்கும் என்றே எடுத்துக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, எனக்கு வலுவான நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...