Skip to main content

பெண்களுக்கு ரூ.1000 பற்றி நான் சொன்னது விதிமீறலா? “இல்லவே இல்லை” முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

பெண்களுக்கு ரூ.1000 பற்றி நான் சொன்னது விதிமீறலா? “இல்லவே இல்லை” முதல்வர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!

அதிமுகவின் தேர்தல் விதிமீறல் புகார் பற்றி முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

ஈரோடு : மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக் கூறி தேர்தல் அலுவலரிடம் அதிமுக புகார் மனு அளித்தது.

இந்நிலையில், தான் பேசியது தேர்தல் நடத்தை விதி மீறலில் வராது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் தீவிர பிரச்சாரம்:

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட காந்தி சிலை, அக்ரஹாரம், சம்பத் நகர், முனிசிபல் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

திறந்த வேனில் இருந்தபடி பேசி வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின், நடந்து சென்றும் ஆதரவு திரட்டினார்.

பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும் என்பது பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

"நாங்கள் அறிவித்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று மிச்சமிருக்கிறது. அதை நான் மறக்கவில்லை. எதிர்கட்சித் தலைவரோ, மக்களோ மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்.

நிதி நிலைமையை முன்னர் ஆட்சியில் இருந்தவர்கள் ஒழுங்காக வைத்திருந்தால் வந்தவுடன் கொடுத்து இருப்போம்.

ரூ.1000 உரிமைத்தொகை வழங்குவது பற்றி வரும் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று கூறி, அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளரும் வழக்கறிஞருமான இன்பதுரை, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, மகளிருக்கான உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதல்வர் பேசியது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும், சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய முதலமைச்சரே இதுபோன்று செயல்படுவது தவறானது என்றும் இன்பதுரை தெரிவித்தார்

இந்நிலையில், வேறு பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ரூ.1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம்தான். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம் பற்றி பேசுவது தேர்தல் விதிமீறலில் வராது என முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தான் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும், அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழக்கும் அளவுக்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும் என்றும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம் என்றும் பேசினார்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் 85% நடத்தி முடித்துள்ளோம், மீதமுள்ள 15% வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றி முடிப்போம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...