ஈரோடு கிழக்குஇடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!
ஈரோடு கிழக்குஇடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
முக்கிய தலைவர்களின் நேரடி பிரச்சாரங்கள் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக கே.எஸ் தென்னரசு நாம் தமிழர் மேனகா தேமுதிக ஆனந்த் ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்
இதையடுத்து 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது.
செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது.
தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், முக்கூர் என் சுப்பிரமணியன் என்று மொத்தமாக மாஜி அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.எப்படியும் குறைந்த பட்ச ஓட்டாவது வாங்கி வெற்றி பெற்றால் தான் அதிமுக வுக்கு மரியாதை என மாஜி க்களிடமும் ம.செ.களிடமும் கூறி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி
அதிமுகவிற்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
60 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை எடுக்க வேண்டும் என்றால் இன்னும் உழைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தரப்பு வேகம் காட்ட தொடங்கி உள்ளனராம்.
ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இங்கே பிரச்சாரம் மேற்கொண்டார்.
பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையே உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்,
"21 மாத திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். இரண்டாவது அலை கொரோனா ஏற்பட்ட போது 2.14 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கினோம்.
ஆவின் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தோம். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் பெண்கள் 222 பயணங்களை இலவசமாக ஈரோட்டில் மட்டும் 11 கோடி பேர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.
உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 எப்போது வழங்கப்படும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது விரைவில் அதை கொடுப்போம்.
ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் 5-6 மாதங்களில் கண்டிப்பாக கொடுப்போம் நான் உறுதி அளிக்கிறேன்" என்று கூறினார்.
Comments
Post a Comment