Skip to main content

ஈரோடு கிழக்குஇடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!

ஈரோடு கிழக்குஇடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

முக்கிய தலைவர்களின் நேரடி பிரச்சாரங்கள் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் காணப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக கே.எஸ் தென்னரசு நாம் தமிழர் மேனகா தேமுதிக ஆனந்த்  ஆகியோர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்

இதையடுத்து 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது.

செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. 

தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, உடுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், முக்கூர் என் சுப்பிரமணியன் என்று மொத்தமாக மாஜி அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது.

எப்படியும் குறைந்த பட்ச ஓட்டாவது வாங்கி வெற்றி பெற்றால் தான் அதிமுக வுக்கு மரியாதை என மாஜி க்களிடமும் ம.செ.களிடமும் கூறி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி

அதிமுகவிற்கு ஆதரவாக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

60 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை எடுக்க வேண்டும் என்றால் இன்னும் உழைக்க வேண்டும் என்று திமுக நிர்வாகிகள் தரப்பு வேகம் காட்ட தொடங்கி உள்ளனராம்.

ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கி உள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இங்கே பிரச்சாரம் மேற்கொண்டார்.

பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையே உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின்னர் சிறிது ஓய்வுக்குப் பிறகு   ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின்,

"21 மாத திமுக ஆட்சியில் பல நலத்திட்டங்களை செய்து இருக்கிறோம். இரண்டாவது அலை கொரோனா ஏற்பட்ட போது 2.14 லட்சம் குடும்பங்களுக்கு தலா 4000 ரூபாய் வழங்கினோம்.

ஆவின் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்தோம். அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மூலம் பெண்கள் 222 பயணங்களை இலவசமாக ஈரோட்டில் மட்டும் 11 கோடி பேர் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளனர்.

உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 எப்போது வழங்கப்படும் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது விரைவில் அதை கொடுப்போம்.

ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின் 5-6 மாதங்களில் கண்டிப்பாக கொடுப்போம் நான் உறுதி அளிக்கிறேன்" என்று கூறினார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...