வந்தவாசி: 10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வு மாணவர்களாக 59 நபர்கள் அரசு பொது தேர்வு எழுதுகிறார்கள்.
அவர்களுக்கான தேர்வுக்கூட ஹால்டிக்கெட் கல்வி மைய புதிய வளாகத்தில் வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு இரும்பேடு ஊ.ஒ.தொ.பள்ளி தலைமை ஆசிரியர் க. வாசு பங்கேற்று சிறப்புரை ஆற்றி அனுமதி சீட்டை வழங்கினார்.
மேலும் கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ஆர்சிஎம் உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியர் செல்வராஜ், எய்டு இந்தியா திட்ட பயிற்றுநர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அனைவருக்கும் எழுதுகோல் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment