Skip to main content

டெல்லி: பாரதிய ஜனதாவை கண்டித்து 14 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

டெல்லி: பாரதிய ஜனதாவை கண்டித்து 14 கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுவை 14 கட்சிகள் சார்பில் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்தார்.

முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏப்ரல் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது கர்நாடகத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், 'அனைத்துத் திருடர்களும் 'மோடி' என்ற பின்னொட்டுப் பெயரைக் கொண்டிருப்பது எவ்வாறு எனத் தெரியவில்லை' என்றார்.


ராகுலின் இந்தக்கருத்துஒட்டுமொத்த மோடி சமூகத்தினரையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி குஜராத் பா.ஜ.க. எம்.எல்.ஏ.-வும், மாநில முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 

இந்த விவகாரத்தில் இந்திய தண்டனையியல் சட்டம் 499, 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா விசாரித்து வந்தார். 

ராகுல் காந்தி கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபரில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கு தொடர்பான தனது தரப்பு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஹெச்.ஹெச்.வர்மா நேற்று  வெளியிட்டார். 

வழக்கில் ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அந்தத் தீர்ப்பில், 'மக்களவை உறுப்பினரால் (ராகுல்) தெரிவிக்கப்பட்ட கருத்து மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பிட்ட நபர் சார்ந்து அவர் பேசியிருக்கலாம்.

ஆனால், வேண்டுமென்றே பொதுவாக அவர் தெரிவித்த கருத்து, மோடி சமூகத்தினருக்கு எதிரான குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கையாகும். முறையற்ற கருத்து தெரிவித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் அவர் ஏற்கனவே மன்னிப்பு கோரியுள்ளார்.

அப்படியிருந்தும், அவரது நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 

அவருக்குக் குறைந்த அளவிலான தண்டனை வழங்கினால், அது தவறான செய்தியை மக்களிடம் சேர்ப்பதாகவும் சட்ட விதியை மதிக்காததாகவும் அமையும்' என்று குறிப்பிட்டார். 

அதே வேளையில், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார்.

ராகுல் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. 

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று 14 கட்சிகள் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசிய மாநாடு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 14 கட்சிகள் அந்த மனுவில் கையெழுத்திட்டு இருந்தன. 

அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

விசாரணை என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

நாங்கள் எந்த வழக்கு விசாரணையையும் ரத்துசெய்ய வேண்டும் என்று கோரவில்லை. அதே சமயத்தில் வழக்கு விசாரணை நடவடிக்கைக்கு முன்பு நடைமுறைகளை வரையறுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் ஏவி விடப்பட்டு மத்திய அரசால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. 

எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இந்த மனுவை 14 கட்சிகள் சார்பில் அபிஷேக் சிங்வி தாக்கல் செய்தார். 14 கட்சிகளின் சார்பில் அவர் நீதிபதிகளிடம் முறையிட்டு பேசினார்.

இந்த முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி ஏப்ரல் 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார். 

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...