செய்யாறு: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உயர்நீதிமன்றம்தீர்ப்பளித்தையொட்டி,தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
செய்யாறு: அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தையொட்டி,தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி நேற்று பொறுப்பேற்றார்
இதைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான தூசி கே.மோகன் அவர்களின் சீரிய வழிக்காட்டுதலின்படி, செய்யாறு நகர கழக செயலாளர் வெங்கடேசன் தலைமையில், அவைத்தலைவர் ஜனார்த்தனம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆரணி கூட்ரோட்டில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
இந் நிகழ்ச்சியில் செய்யாறு நகர கழகத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment