"சங்க இலக்கியங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்" மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு
"சங்க இலக்கியங்களை இளைஞர்கள் வாசிக்க வேண்டும்" மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்வில் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பேச்சு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா ஐஏஎஸ் தலைமை தாங்கினார்.
கல்லூரி தலைவர் பா. முனிரத்தினம், செயலாளர் மு. ரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பங்கேற்று, சங்க இலக்கியங்களில் உள்ள தொன்மை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
மேலும் "சங்க இலக்கியத்தை இன்றைய சமூகத்திற்கு விளக்கும் ஊடகமாக இளைஞர்கள் திகழ வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் பேசுகையில்: "கலையும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து கொண்டு தான் இருக்கிறது. இதை ஒப்பு நோக்கியே இன்று வரை சரித்திரம் தொடர்கிறது" என குறிப்பிட்டார்
மேலும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவ... மாணவிகள் பங்கேற்றனர்.
மேலும் இலக்கியம் சார்ந்த வினா விடை நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்கள் கேட்ட இலக்கிய வினாக்களுக்கு எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி பதில் அளித்தார்.
மேலும் பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சுபாஷ் உள்ளிட்ட அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment