Skip to main content

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொரோனா! வழக்கறிஞர்கள் கட்டாயம் மாஸ்க் போடணும் - தலைமை நீதிபதி

சென்னை உயர்நீதிமன்ற  நீதிபதிகளுக்கு கொரோனா! வழக்கறிஞர்கள் கட்டாயம் மாஸ்க் போடணும் - தலைமை நீதிபதி

 சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் வழக்கறிஞர்கள் வாதிடும் நேரம் தவிர பிற நேரங்களில் உயர்நீதிமன்றத்தில் முகக் கவசம் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளாக நாளாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் 3 முதல் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி ராஜா தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் வழக்கறிஞர் அனைவரும் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பேசிய சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா பேசுகையில்:

"3 - 4 நீதிபதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கறிஞர்கள் கோர்டில் வாதிடும்போது முகக் கவசத்தை நீக்கிக் கொள்ளலாம். மற்ற சமயங்கள் நீதிமன்ற விசாரணை கூடங்களில் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும்." என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிமன்ற விசாரணை நடத்தும் வாய்ப்புகள் உள்ள நிலையில், ஏன் இத்தனை வழக்கறிஞர்கள் கூட்டமாக நீதிமன்றத்துக்கு வருகிறார்கள்? விசாரணைக் கூடங்களில் கூட்டமாக நிற்கிறார்கள். நீதிமன்றங்களுக்கு வரும் கூட்டத்தை கட்டுப்படுத்தவே வீடியோ கான்பரன்சிங் மூலமாக விசாரணை நடத்தப்படுகிறது." என்றார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்று கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில்:

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5,866 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 514 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,195 ஆக அதிகரித்து இருக்கிறது.

இன்று கொரோனாவால் குணமடைந்து 366 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். சென்னையில் 138, கோவையில் 55, கன்னியாகுமரியில் 50, செங்கல்பட்டில் 26 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்கறிஞர்களை வைத்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள தயாராக உள்ளது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...