அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம்!
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமியை அங்கீகரித்தும்,
ஜூலை 11 பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததை அடுத்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரம் விழாக் கோலம் பூண்டது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகனின் சீரிய வழிக்காட்டுதலின்படி, வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில், நூற்றுக்கணக்கான அதிமுக வினர் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
தொடர்ந்து ஐநூறு பேருக்கு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் அன்னதானம் வழங்கினார் உடன் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment