Skip to main content

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி வலியுறுத்தல்

செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்
சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கிட வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஒ.ஜோதி கோரிக்கை வைத்து பேசினார்.

செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி சட்டப்பேரவையில் நேற்று வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வேண்டுகோளின்படி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த தேர்தல் பிரசாரத்தில் செய்யாறை தலைமை இடமாகக்கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

முதலில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து போட்டியிட்ட தேர்தலில் தலைவர் கலைஞரும், செய்யாறு தொகுதியில் புலவர் கோவிந்தனாரும் வெற்றி பெற்றனர்.

திமுக தன்னுடைய முதல் தேர்தலையே செய்யாறு தொகுதி கழக கோட்டை என்பதை நிரூபித்தது. 1962ல் வருவாய் கோட்டமாக உருவாகி 61 ஆண்டு காலமாக இயங்கி வருகிறது.

மாவட்ட தலைநகருக்கு இணையாக அனைத்து மாவட்ட அலுவலகங்களும், தமிழகத்தில் அதிகமாக சுமார் 8000 மாணவர்கள் பயிலும் அரசு கலைக்கல்லூரி, செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம்(ஐடிஐ), சார்பு நீதிமன்றங்கள், ஆசியாவிலேயே 2வது பெரிய கூட்டுறவு சர்க்கரை ஆலை, செய்யாறு சிப்காட்(பேஸ்1-3 என்ற அலகில்) சுமார் 5000 ஏக்கர் நிலம் கையக படுத்தப்பட்டு ஒரு லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆதலால் செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

வெம்பாக்கம் ஒன்றியம் வடமணப்பாக்கம் கிராமத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்.

புளியரம்பாக்கம்- அனக்காவூர் வழியே செய்யாற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டி காஞ்சிபுரம், வந்தவாசி செல்வதற்கு உள் வட்டச்சாலை அமைத்துத் தர வேண்டும்.

வெம்பாக்கம் வட்டத்திற்கு அடிப்படை தேவையான தாலுகா காவல் நிலையம், மாவட்ட குற்றவியல், உரிமையியல் நீதிமன்றம், கருவூலம், தீயணைப்பு நிலையம் ஆகியவற்றை அமைத்து தர வேண்டும்.

சித்தாத்தூர் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள தரைப் பாலத்தை மேம்பாலமாக அமைத்து தர வேண்டும்.

கொருக்கை கிராமத்தில் பெரணமல்லூர், ஆரணி சர்பதிவாளர் அலுவலகங்களில் இயங்கி வந்த பத்திரப்பதிவினை மாற்றி அதே செய்யாறு வட்டத்திற்கு உட்பட்ட கொருக்கை கிராமத்திற்கு புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும்.

தொகுதியில் தொழிலாளர் ஈட்டுறுதி(இஎஸ்ஐ) மருத்துவமனை, அரசு ஓட்டுநர் பயிற்சி மையம் (ஐஆர்டி) அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன் வைத்து பேசினார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...