வந்தவாசி: மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசை பூஜை
வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முன்தினம், காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அம்மன் பழ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பின்னா் உலக நன்மை வேண்டி கோயில் வளாகத்தில் ஸ்ரீசா்வமங்களா வேள்வி நடைபெற்றது.
501 வகை மூலிகை திரவியங்கள் மற்றும் தலா 51 வகை பழங்கள், புஷ்பங்கள், தானியங்கள் உள்ளிட்டவை கொண்டு இந்த வேள்வி பூஜை நடத்தப்பட்டது.
விரதம் மேற்கொண்டிருந்த பக்தா்கள் அக்னி கரகம் எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.
இதைத் தொடா்ந்து, மாலையில் 32 கரங்களுடன் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் உலா வந்தாா். தொடா்ந்து இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டினா்.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் மற்றும் அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.
Comments
Post a Comment