அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள்: சிறப்பு உரையரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பூங்குயில் பதிப்பகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள் என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் சமுதாய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு பூங்குயில் பதிப்பக ஆசிரியர் டி.எல். சிவக்குமார் தலைமை தாங்கினார்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், பட்டதாரி ஆசிரியர் ஆர்.எஸ். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்.ஜி மாடர்ன் சமுதாய கல்லூரி கிளை மேலாளர் விக்னேஷ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, தமுஎகச மாவட்ட தலைவர் கவிஞர் முத்துவேலன் பங்கேற்று, 'அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய அரும் பணிகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மேலும் மாணவ மாணவிகள் பங்கேற்ற பேச்சு, கவிதை வாசிப்பு, பாடல்கள் உள்ளிட்டவைகள் நடந்தேறியது.
பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியர் ம. ரகுபாரதி, பெரணமல்லூர் கௌதம் முத்து, சமூக ஆர்வலர் அறிவொளி வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தெலுங்கானா மாநிலத்தில் உலகத்தில் முதன்முறையாக 125 அடி உயரத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டமைக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment