செய்யாறு: எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடை!
செய்யாறு: எருமைவெட்டி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டிகள் பள்ளியின் தலைமை ஆசிரியா் நன்கொடை!
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் அனக்காவூா் ஒன்றியத்தில் எருமைவெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 8-ஆம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியா் சு.பெருமாள் வருடந்தோறும் தனது சொந்த செலவில் மிதிவண்டிகளை நன்கொடையாக வழங்கி வருகிறாா்.
நிகழ் கல்வியாண்டில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் பத்து மாணவ, மாணவிகளுக்கு ரூ. 55 ஆயிரம் மதிப்பில் மிதிவண்டிகளை தலைமை ஆசிரியர் சு.பெருமாள் வழங்கினார்
இந் நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் மனோகா் தலைமை வகித்தாா்.
தலைமை ஆசிரியா் சு. பெருமாள் வரவேற்றாா்.
மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், அனக்காவூா் ஒன்றிய குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு மிதி வண்டிகளை பள்ளி மாணவா்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினாா்.
அப்போது, பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது அதை ஏற்றுக் கொண்ட எம்எல்ஏ ஒ.ஜோதி நிதியாண்டில் புதிய கட்டிடத்தை கட்டித் தருவதாக உறுதியளித்தாா்.
Comments
Post a Comment