Skip to main content

’கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது’ பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

’கர்நாடக தேர்தல் வெற்றியை வைத்து நாடாளுமன்ற தேர்தலை கணிக்க முடியாது’ பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

”மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்துகொள்வதற்கு எதிராக கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்கை விரும்புகிறேன்”

கர்நாடகாவில் வென்றதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்

கர்நாடகாவில் நடைபெற்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் தனிப்பெரும்பன்மையுடன் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றி அடுத்து வர உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பலம் சேர்க்கும் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரசாந்த் கிஷோர்,

கடந்த 2013 கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அடுத்து நடைபெற்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோல்வியைத் தழுவியது.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன் நடைபெற்ற மூன்று பெரிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றாலும் அடுத்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றது என கூறி உள்ளார்.

"கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், மக்களவைத் தேர்தலில் என்ன காத்திருக்கிறது என்பதற்கான முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவை தவறாகப் புரிந்துகொள்வதற்கு எதிராக கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை எச்சரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர்,

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாய்ப்புகள் குறித்த தனது கருத்தை உறுதிப்படுத்த புள்ளிவிவரங்களை வெளியிட்டார்.

அதில் 2012-ல் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது நினைவிருக்கலாம்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தமுள்ள 80 இடங்களில் 73 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. .

2013 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றபோதும், லோக்சபா தேர்தலில் பாஜகவிடம் பரிதாபமாக தோற்றதை அவர் நினைவுக்கூர்ந்ததுடன், "2018 சட்டமன்றத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் அதன் வெற்றியை காங்கிரஸ் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது, அதைத் தொடர்ந்து சில மாதங்களுக்குப் பிறகு 2019 லோக்சபா தேர்தலில் இந்த மாநிலங்களில் அதன் மோசமான செயல்திறன் இருந்தது" என்று கிஷோர் கூறி உள்ளார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...