வந்தவாசி தாலுக்கா அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்தி விழா!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் 10 நாள் ஜமா பந்தி விழா தொடங்கப்பட்டது
இன்று மழையூர் பிர்காவை சேர்ந்த கிராம பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர்.
இந் நிகழ்வில், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடேசன் கலந்து கொண்டு முதலில் மழையூர் பிர்காவை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மேலும் பட்டா, பட்டா மாற்றம், பட்டா உள்பிரிவு, புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு பெயர் நீக்கம், இறப்பு சான்று, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை என பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர்.
வட்டாட்சியர்கள் ராஜேந்திரன் (சமூக பாதுகாப்பு) சுபாஷ் தலைமையில், நடைபெற்ற இந் நிகழ்ச்சியில்,
சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கலைக் கல்லூரி நிறுவனர் முனிரத்தினம் மற்றும் துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர் செந்தில் நாதன் கிராம நிர்வாக அலுவலர்கள் முரளிமனோகரன், முருகேசன், பாபு, மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி தாலுக்கா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி விழாவில் பொதுமக்கள் சிரமம் இல்லாமல் மனு கொடுக்க பிரத்யோகமாக சிறப்பு கவுண்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
" உடனுக்குடன் மனுக்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உடையவர்களுக்கு ஜமா பந்தி நிறைவு நாள் அன்று சான்றுகள் வழங்கப் படும்" என அலுவலர்கள் தெரிவித்தனர்
Comments
Post a Comment