ஆரணி: விடியா திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரில், விடியா திமுக ஆட்சியில் தொடரும், கள்ளச்சாராய மரணம், போலிமதுபானங்கள் விற்பனை, ஊழல் முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள்முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ முன்னாள் எம்எல்ஏ க்கள் கலசபாக்கம் வி.பன்னீர்செல்வம் பாபு முருகவேல் கலந்து கொண்டு திமுக அரசின் அவலநிலையை பட்டியலிட்டு பேசினர்
தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் எழுச்சியுரையாற்றி, திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினார்.
அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் இணைந்து கோஷமிட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் பி.ஜாகீர் உசேன் தி.மலை வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன் விஎஸ்எஸ் லதாகுமார் மற்றும் ஒன்றிய,நகர கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment