ஏனாதவாடி: அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்றத் தொகுதிக்கு ட்பட்ட ஏனாதவாடி கிராமத்தில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி அமைத்தல் முகாம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது
அதிமுக விற்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுதல் உள்ளிட்ட விவகாரங்கள் போர் கால அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சர் கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ போன்றோர் சுழன்று சுழன்று களப்பணியாற்றி வருகின்றனர்
அவ் வகையில் செய்யாற்றை பொறுத்தவரை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முன்னிலை வகிக்கிறார் என கூறலாம்
நேற்று ஏனாதவாடியில் ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் தலைமையில், அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் முக்கூர் என் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அதிமுக உறுப்பினர்களுக்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்தனர் முன்னதாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டனர்
இந் நிகழ்வில், 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போட்டி போட்டு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்தனர்
வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் முன்னிலையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள், குளிர் பானங்கள் வழங்கப்பட்டன
உடன் வெம்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திருமூலன் (எ) பையாகுட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோமதி ரகு ஒன்றிய துணைச்செயலாளர் வி பாஸ்கர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நமண்டி பாலன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment