கோடைக்கால இலவச பயிற்சி: மாணவர்களுக்கு வளர் இளம் மேதை விருது!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் கடந்த ஏப்ரல் 29 முதல் நடைபெற்ற மாணவர்களுக்கான கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் ( ஓவியம், யோகா, திருக்குறள் ஒப்பித்தல், அடிப்படை இந்தி பயிற்சி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கையெழுத்து பயிற்சி, கராத்தே) உள்ளிட்டவை நடைபெற்றது.
இந்த வகுப்பின் நிறைவு விழாவில் பயிற்சி பெற்ற 66 மாணவர்களுக்கு "வளர் இளம் மேதை " சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட்டது.
திண்டிவனம் சாலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா தலைமை தாங்கினார்.
அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி. வெங்கடேசன், இலவச சட்டப் பணிக்குழு ஆலோசகர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி காவல்துறை சார் ஆய்வாளர் ராமு அவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு "வளர் இளம் மேதை " விருதை வழங்கி சிறப்புரையாற்றினர்.
மேலும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் கு. சதானந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இந் நிகழ்ச்சியில் ஓவிய ஆசிரியர் பெ.பார்தீபன், கணினி ஆசிரியர் எ. தேவா, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக், முதுகலை ஆசிரியர் பா. சுரேஷ், இந்தியன் டிஜிட்டல் குரூப்ஸ் வந்தை பிரேம், பட்டதாரி ஆசிரியை சாந்தி, ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் விநாயக மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவ மாணவியர் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் கராத்தே பயிற்சி மற்றும் சிலம்பம் போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் ஆசிரியை சுவேதா நன்றி கூறினார்.
Comments
Post a Comment