தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
நில சீர்திருத்த ஆணையராக இருந்த பீலா ராஜேஷ், தமிழ்நாடு எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் தலைமை செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வணிக வரித்துறை இணைஆணையராக இருந்த வீர் பிரதாப் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளராக விஜயா ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறுபான்மையினர் நலத்துறை ஆணையராக ஆசியா மரியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளராக இருந்த சந்திர குமார் சக்காமுரியை, சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதே போன்று , நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவை மேலாண் இயக்குனராக விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடையாறு - கூவம் மறுசீரமைப்பு திட்ட அதிகாரியாகவும்
கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஸ்வர்னா நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ரஞ்ஜித் சிங்கும், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக அலர்மேல்மங்கையும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று, தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரியாக சுரேஷ்குமாரை நியமித்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
Comments
Post a Comment