அமமுக - ஓபிஎஸ் இணைப்பால் 14 மக்களவைத் தொகுதிகளில் வலுவாகியுள்ளோம் - டிடிவி தினகரன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:-
'எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வகித்த தலைமைப் பதவியை கபளீகரம் செய்து விட்டனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்குழுவோடு அதிமுகவிற்கு சமாதி கட்டி விட்டனர்.
அமமுக - ஓபிஎஸ் கூட்டணி என்பது இயற்கையாக அமைந்த கூட்டணி. ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றுபட்டால்தான் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமைந்த கூட்டணி.
இந்த கூட்டணியால், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 14 மக்களவைத் தொகுதிகளில் மிகவும் வலுவாகி விட்டோம்.
இங்கு மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க உத்வேகம் பெற்றுள்ளோம்.
Comments
Post a Comment