ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர் நகர் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜை!
ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் அம்பேத்கர் நகர் சிமெண்ட் சாலைக்கு பூமி பூஜை!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அம்பேத்கர் நகர் பகுதியில் சுமார் ரூ. 5-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பக்ககால்வாய் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவை முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினரும், ஆரணி சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்
இந் நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் கொளத்தூர் பி.திருமால்,ஜெயபிரகாஷ் கண்ணமங்கலம் பேரூராட்சி கழக செயலாளர் எம்.பாண்டியன், ஆரணி நகர கழக செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment