வந்தவாசி:ஆசியன் இன்ஸ்டிடியூட் சார்பில் உலக இரத்த கொடையாளர் தின கல்வி கருத்தரங்கம்!
ஆசியன் இன்ஸ்டிடியூட் சார்பில் உலக இரத்த கொடையாளர் தினம் வந்தவாசி முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை சார்பில், நிறுவனர் பீ.ரகமத்துல்லா தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில், இரத்த கொடையாளர்களை பாராட்டி, இந்தியன் ரெட்கிராஸ் சங்க வந்தவாசி கிளை துணைத் தலைவர் இரா.சரவணன் சிறப்புரையாற்றினார்
இதில் இரத்ததானம் குறித்து இந்தியன் ரெட்கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், நல்லூர்
சுகாதார ஆய்வாளர் கே.சேகர் விளக்கயுரையாற்றினர்.
இந்நிகழ்வில், கவிஞர் தமிழ்ராசா, பயிற்றுநர்கள் ஜாய் ஜான்சிராணி, வினோதினி, ஜீனத் மற்றும் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,அன்பால் அறம் செய்வோம் தன்னார்வ குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவாக,முகம்மது இஸ்மாயில் நினைவு அறக்கட்டளை தாளாளர்
ஆசியா பர்வீன் நன்றி கூறினார்.
Comments
Post a Comment