தி.மலை: விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
திருவண்ணாமலையில் வடக்கு, தெற்கு மாவட்ட அதிமுக சார்பாக, திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரே நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர்கள் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ (தெற்கு) தூசி கே.மோகன் (வடக்கு) தலைமையில் நடைபெற்ற இக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்
தொடர்ந்து விடியா திமுக அரசின் அவலநிலை யை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டன
முன்னதாக இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 2000 பேருக்கு மேற்பட்டோர் பங்கேற்பது என வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே. மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது
இதைத் தொடர்ந்து ஆரணி செய்யாறு கலசபாக்கம் வந்தவாசி ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலிருந்து 150 வாகனங்கள் மூலம் 2000 பேருக்கு மேற்பட்டோர் புறப்பட்டு சென்றனர்
செய்யாறு வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் மட்டும் 500 பேர் வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் தலைமையில் கலந்து கொண்டனர் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.மகேந்திரன் செய்திருந்தார்
இதே போல் வந்தவாசி, ஆரணி,கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
அனக்காவூர் ஒன்றிய அதிமுக சார்பில், ஒன்றிய கழக செயலாளர்கள் வே.குணசீலன் மு.எம்எல்ஏ சி.துரை தலைமையில் அதிமுக வினர் பெருமளவில் பேருந்துகளில் புறப்பட்டு சென்றனர்
Comments
Post a Comment