Skip to main content

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம் : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க கோரி போராட்டம் : மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

2024 ல் நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். சர்வாதிகாரம் வீழ்த்தப்பட வேண்டும்

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில்,

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய ஆயுள் தண்டனை சிறைவாசிகள் 37 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும்  ஜூலை 9 ஆம் தேதி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோவை மத்திய சிறையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பை தமிழக அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பொது மன்னிப்பு வழங்க  வேண்டும்.

மேலும் நேற்று பாட்னாவில் 16 கட்சிகள் ஒன்று சேர்ந்த ஒரு ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலான, சிறப்பான ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

2024 ல் நடைபெற உள்ள தேர்தல் ஜனநாயகத்திற்கும்,  சர்வாதிகாரத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். சர்வாதிகாரத்தை வீழ்த்தப்பட  வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர்  முக.ஸ்டாலின் தமிழகத்தில் எவ்வாறு மதச்சார்பற்ற அமைப்புகள் ஓரணியில் உள்ளனர் என்பதை எடுத்துச் சொல்லியிருப்பது,  இந்தியாவிற்கே முன் மாதிரியாக அமைத்திருக்கிறது.

இதே அடிப்படையை பின்பற்றலாம் என்ற தெளிவான கருத்தை கூறியுள்ளார். அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற உள்ளது. மதம் மற்றும் இன்னும் பிற காரணங்களால் நாட்டை பிளவுபடுத்த கூடிய பாஜகவிற்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்திருப்பது நல்ல முயற்சியாகும். கூட்டத்தில் ஆம் ஆத்மி எழுப்பிய பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவில் விவாதித்து  நல்ல முடிவை எடுப்போம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

தமிழக ஆளுநர் தமிழக மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். சட்டமன்ற சட்ட முன்வடிவுகளை ஒப்புதல் வழங்காமல் வைக்கிறார்.

சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானமும் ஆளுநருக்கு அனுப்பப்படும், அவர் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளட்டும் அனுமதி வழங்கி தான் ஆக வேண்டும் என இவ்வாறு  தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...