Skip to main content

மோடியிடம் கேள்வி: அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு டார்ச்சர்! வெள்ளை மாளிகை கண்டனம்

மோடியிடம் கேள்வி: அமெரிக்க பெண் பத்திரிகையாளருக்கு டார்ச்சர்! வெள்ளை மாளிகை கண்டனம்

அமெரிக்காவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடியிடம் சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க பெண் பத்திரிகையாளரை துன்புறுத்தும் நடவடிக்கைக்கு வெள்ளை மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

பெண் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கிக்கு எதிரான துன்புறுத்தல்கள், 'மிக மோசமான ஆன்லைன் துன்புறுத்தல்' என்றும் வெள்ளை மாளிகை தனது கண்டனத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள்கள் அமெரிக்க பயணத்தின்போது, ஜூன் 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, வெள்ளை மாளிகைக்கான வால் ஸ்ட்ரீட் இதழின் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி, இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந் நிலையில், சிறுபான்மையினர் குறித்து கேள்வி எழுப்பியிருந்த பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கியை, சிலர் சமூக ஊடகங்கள் வாயிலாக துன்புறுத்தும் நடவடிக்கைகள் நிகழ்த்தி வருவதையொட்டி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தரவுகளின் தொடர்புத்துறை தலைவர் ஜான் கிர்பை, பெண் பத்திரிகையாளர் துன்புறுத்தப்படுவது தொடர்பான தகவல்கள் வெள்ளை மாளிகைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இது ஏற்றுக்கொள்ளமுடியாதது, இதுபோன்று, பத்திரிகையாளர்கள் எங்கும், எந்தச் சூழலிலும் துன்புறுத்தப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இது, கடந்த வாரம், நடைபெற்ற பயணத்தின்போது வெளிப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கிர்பையின் அறிக்கையைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரைன் ஜீன்-பியர்ரியும் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஊடகங்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டியது அவசியம், அதனால்தான் கடந்த வாரம் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

எனவே, எந்தவொரு பத்திரிகையாளரும், தனது கடமையைச் செய்ததற்காக மிரட்டப்படுவதையோ அல்லது துன்புறுத்தப்படுவதையோ எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது, கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான அரசு, ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதை முக்கியமாகக் கருதுகிறது.

எனவேதான், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் மற்றும் இந்திய பிரதமர் இருவரும் செய்தியாளர்களை சந்திக்க வேண்டியதுமுக்கியம் என்று வெள்ளை மாளிகை கருதியது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக செய்தியாளர்களை சந்திப்பது என்பது மிகவும் அரிதான நிகழ்வு.அப்படி ஒரு நிகழ்வு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.

வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சப்ரினா சித்திக்கி பிரதமர் நரேந்திர மோடியிடம், "இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும், அரசை விமா்சிப்பவா்களை வாய் திறக்காமல் செய்வதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநாட்டவும் நீங்களும் உங்கள் அரசாங்கமும் என்ன நடவடிக்கையை எடுக்க விரும்புகிறீா்கள்?' என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் கேள்வியை கேட்டதும் ஆச்சரியமடைந்த பிரதமர் மோடி, அதிபா் பைடன் கூறியதுபோல், இந்தியா மற்றும் அமெரிக்காவின் மரபணுவில் ஜனநாயகம் உள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜனநாயகம் உள்ளது.

இந்தியாவின் முன்னோா்கள் அரசமைப்புச் சட்டம் குறித்து எங்களுக்குக் கற்பித்துள்ளனா். அரசமைப்புச் சட்டத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகளை இந்திய அரசு பின்பற்றுகிறது.

எனவே பாகுபாடுகளுக்கு முற்றிலும் இடமில்லை என்று பதிலளித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியாளர் சந்திப்பு எவ்வாறு முக்கியத்துவம் பெற்றதோ, அதுபோல, சித்திக்கி எழுப்பிய கேள்வியும் அதிமுக்கியத்துவம் பெற்றது.

ஆனால், இது பாஜக தொழில்நுட்பக் குழுத் தலைவர் அமித் மாளவியாவால் சர்ச்சையாக்கப்பட்டது.

பெண் பத்திரிகையாளர் சித்திக்கின் கேள்வி பின்னணி கொண்டது என்றும், டூல்கிட் கும்பல் பயன்படுத்துவதைப் போன்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், பின்னணி கொண்ட இந்த கேள்வியை, பிரதமர் நரேந்திர மோடி தனது பதிலால் தவிடுபொடியாக்கிவிட்டார் என்றும் பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்களின் டிவிட்டர் பக்கங்களில், தொடர்ந்து சபரினா சித்திக்கி குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அவர் ஒரு பாகிஸ்தானி இஸ்லாமியவாதி என்றும், இவர் இந்தியாவை குறிவைத்தே கேள்வி எழுப்பினார் என்றும், வெறுப்பு என்பது பாகிஸ்தானியர்களின் மரபணுவிலேயே உள்ளது என்றும் பலவாறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

அதோடு நிற்காமல், பாகிஸ்தானிய பெற்றோருக்குப் பிறந்தவர், இவரது கேள்வி இஸ்லாமியர்களின் கூற்றுகளை எதிரொலிப்பதாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

தன்னை ஒரு இந்திய எதிர்ப்பு நபராகக் காட்டும் சமூக ஊடகக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சித்திக்கி, தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய கிரிக்கெட் அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தை இந்தியாவில் பிறந்த தந்தையுடன் கொண்டாடும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். மேலும், சிலர் எனது தனிப்பட்ட பின்னணியை இங்கே அடையாளப்படுத்தத் தேர்ந்தெடுத்திருப்பதால், ஒரு முழுமையான படத்தை அளிப்பது மட்டுமே சரியானது. சில நேரங்களில் அடையாளங்கள் தோற்றத்தில் இருப்பதைவிடவும் மிகவும் சிக்கலானவை என்றும் அவர் அந்த புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

இவருக்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவு கரத்தை நீட்டியிருக்கிறது.

ஒரு பத்திரிகையாளராக சித்திக்கி தனது பணியை மிகச் சிறப்பாக செய்ததாக அது பாராட்டியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியுடன், பல முன்னணி நிறுவன பத்திரிகையாளர்களும், பிரதமர் நரேந்திர மோடியிடம் மிகக் கடினமானக் கேள்வியை எழுப்பியதற்காக பாராட்டுகளையும் ஆதரவையும் ஒருசேர பதிவிட்டு வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...