செய்யாறு: தென் இலுப்பை ஸ்ரீ ரேணுகாம்பாள் ஆலய கும்பாபிஷேகம் எம்எல்ஏ ஜோதி அன்னையை வழிபட்டார்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தென் இலுப்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ரேணுகாம்பாள் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது
காலை 5 மணி இரண்டாம் கால யாக சாலை பூஜை வேத பாராயணம்,மூல மந்திர ஹோமம் நடைபெற்றது 7.45 க்கு பூர்ணாஹூதி 8 க்கு கலச புறப்பாடு 8.15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு அன்னை யை வழிப்பட்டார் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் அன்னையை வழிப்பட்டனர்
இந் நிகழ்வில், ஒன்றியக்குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் ஒன்றிய திமுக செயலாளர் திராவிட முருகன் கிளை கழக செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment