Skip to main content

திருவாரூர்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் ஆய்வுக்கூட்டம் அரசு கொறடா கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது

திருவாரூர்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் ஆய்வுக்கூட்டம் அரசு கொறடா கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு 2023-2024ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம்    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா முனைவர்  கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது

சட்டமன்ற பேரவை மனுக்கள்குழு உறுப்பினர்கள் கோ.ஐயப்பன்  வி.பி.கந்தசாமி  செ.சுந்தரராஜன் மு.பாபு  கே.பொன்னுசாமி  ஆர்.ராதாகிருஷ்ணன்  டாக்டர்.வை.முத்துராஜா தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் சட்ட மன்ற பேரவை துணை செயலாளர் கோ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில்,

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் .க.மாரிமுத்து மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டத்தில்,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா முனைவர் கோ.வி.செழியன் பேசியபோது:-

"அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே. அதிலும் மக்களை தேடி அதன் பயன்கள் செல்ல வேண்டும் என்பதை ஆர்வம் கொண்டு ஏழை, எளிய ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு உயர்த்திட ஒயாது உழைத்திடும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனதார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற மனுக்களின் குழுவானது மிக முக்கியம் வாய்ந்த குழுவாகும் சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுவானது பொதுமக்களின் பிரச்சினையை நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு குழுவாக செயல்படுகிறது அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் மீது பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அறிக்கை பெறப்பட்டு இன்று தீர்வு செய்யப்பட்டு மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

மேலும்திருவாரூர் மாவட்டத்தில், 26.07.2013 அன்று குழு ஆய்வு மேற்கொண்டு 29.10.2013 அன்று 14வது பேரவையின் மனுக்கள் குழுவால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 32வது அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட 20 மனுக்கள் மீது குழு மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது

இம்மாவட்டத்தினை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அலுவலர்கள் மனுக்கள் மீது உரிய பதிலளித்தார்கள்" என தலைமை கொறடா கோ.வி.செழியன்  தெரிவித்தார்

திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள பிரகதீஸ்வர கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்தும், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட வடபாதி மங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டுவது குறித்தும் கூத்தாநல்லூர் ரகுமானியத் தெருவிலுள்ள ஐந்து கிணறு குளம் அக்கிரமிப்பு அகற்றி தூர்வாருவது குறித்தும் திருவாரூர் நகரம் புகையிலை தோட்டப் பகுதியில் சாலை அமைப்பது குறித்தும் மருதப்பட்டிணம் நடைபாலம் பகுதியில் சாலை அமைப்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர்,திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள்  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
இந் நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா திருத்துறைப்பூண்டி நகர மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் கூத்தாநல்லூர் நகர மன்றத் தலைவர் பாத்திமா பஷீரா மற்றும்  அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...