திருவாரூர்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் ஆய்வுக்கூட்டம் அரசு கொறடா கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது
திருவாரூர்: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் ஆய்வுக்கூட்டம் அரசு கொறடா கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு 2023-2024ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா முனைவர் கோ.வி.செழியன் தலைமையில் நடைபெற்றது
சட்டமன்ற பேரவை மனுக்கள்குழு உறுப்பினர்கள் கோ.ஐயப்பன் வி.பி.கந்தசாமி செ.சுந்தரராஜன் மு.பாபு கே.பொன்னுசாமி ஆர்.ராதாகிருஷ்ணன் டாக்டர்.வை.முத்துராஜா தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் முனைவர்.கி.சீனிவாசன் சட்ட மன்ற பேரவை துணை செயலாளர் கோ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்ட இந் நிகழ்வில்,
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் .க.மாரிமுத்து மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலை வகித்தனர்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மனுக்கள் குழு 2023-2024 ஆம் ஆண்டிற்கான ஆய்வுக்கூட்டத்தில்,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர் அரசு தலைமை கொறடா முனைவர் கோ.வி.செழியன் பேசியபோது:-
"அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே. அதிலும் மக்களை தேடி அதன் பயன்கள் செல்ல வேண்டும் என்பதை ஆர்வம் கொண்டு ஏழை, எளிய ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வு உயர்த்திட ஒயாது உழைத்திடும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனதார நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டமன்ற மனுக்களின் குழுவானது மிக முக்கியம் வாய்ந்த குழுவாகும் சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுவானது பொதுமக்களின் பிரச்சினையை நேரடியாக ஆய்வு செய்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய ஒரு குழுவாக செயல்படுகிறது அந்தவகையில் திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் மீது பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் அறிக்கை பெறப்பட்டு இன்று தீர்வு செய்யப்பட்டு மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
மேலும்திருவாரூர் மாவட்டத்தில், 26.07.2013 அன்று குழு ஆய்வு மேற்கொண்டு 29.10.2013 அன்று 14வது பேரவையின் மனுக்கள் குழுவால் பேரவைக்கு அளிக்கப்பட்ட 32வது அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட 20 மனுக்கள் மீது குழு மறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது
இம்மாவட்டத்தினை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகள் அலுவலர்கள் மனுக்கள் மீது உரிய பதிலளித்தார்கள்" என தலைமை கொறடா கோ.வி.செழியன் தெரிவித்தார்
திருத்துறைப்பூண்டியில் அமைந்துள்ள பிரகதீஸ்வர கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்தும், மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட வடபாதி மங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டடம் கட்டுவது குறித்தும் கூத்தாநல்லூர் ரகுமானியத் தெருவிலுள்ள ஐந்து கிணறு குளம் அக்கிரமிப்பு அகற்றி தூர்வாருவது குறித்தும் திருவாரூர் நகரம் புகையிலை தோட்டப் பகுதியில் சாலை அமைப்பது குறித்தும் மருதப்பட்டிணம் நடைபாலம் பகுதியில் சாலை அமைப்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மனுக்கள் குழுத்தலைவர்,திருவாரூர், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
இந் நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா திருத்துறைப்பூண்டி நகர மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் கூத்தாநல்லூர் நகர மன்றத் தலைவர் பாத்திமா பஷீரா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment