தெய்யார்: ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
வந்தவாசியை அடுத்த தெய்யாரில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது
வந்தவாசியை அடுத்த தெய்யாா் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி திருக் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ் விழாவையொட்டி வியாழக்கிழமை கணபதி ஹோமம், தன பூஜை, பிரவேசபலி, வாஸ்து சாந்தி, அங்குராா்ப்பணம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெற்றது.
நேற்றுக் காலை நாடிசந்தானம், தத்வாா்ச்சனை, விசேஷ பூஜைகள், மகா பூா்ணாஹூதி உள்ளிட்டவை நடைபெற்றது.
தொடா்ந்து தீா்த்தக்குடங்களை தலையில் சுமந்து கோயில் கோபுரத்துக்கு எடுத்துச் சென்ற சிவாச்சாரியார்களால், காலை 10-30 மணிக்கு கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் அன்னையை தரிசனம் செய்தனா்.
Comments
Post a Comment