Skip to main content

மதுரை மாநாடு வரலாறு படைத்தது - அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி!

மதுரை மாநாடு வரலாறு படைத்தது - அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி!

அதிமுக சார்பில் மதுரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வரலாறு படைப்பதற்குக் காரணமாக இருந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அதிமுகவின் மதுரை மாநாடு,இந்தியாவே திரும்பிப் பார்க்கும்வகையில் வெற்றி அடைந்திருக்கிறது.

கடல் அலைபோல ஆர்ப்பரித்துவந்த கட்சித் தொண்டர்கள், எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும், நமது ராணுவக் கட்டுக்கோப்பையும், விசுவாசத்தையும் நிரூபித்துள்ளனர்.

அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும், தமிழ்நாட்டு மக்களின் துயர்விரைவில் தீரும் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் இந்த மாநாடு விதைத்திருக்கிறது.

அண்ணாவின் உருவத்துடன் கூடிய கட்சிக் கொடி, மதுரை மண்ணில் லட்சக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் அசைந்தாடிய காட்சிகள், ஒவ்வொரு தொண்டரையும் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ் கடித்தது.

கட்சியின் 3-ம் தலைமுறை எழுச்சியைக் கண்டு நடுங்கிப் போன கூட்டம், காவல் துறையைக் கொண்டு, மாநாட்டில் தொண்டர்கள் கலந்துகொள்வதைத் தடுக்க பல்வேறு வகைகளில் முயற்சித்தது. பல இடங்களில் தொண்டர்கள் வந்த வாகனங்களை 30 கி.மீ.க்கு முன்பே நிறுத்தி, திசை திருப்பிவிட்டனர். அங்கிருந்து மகளிர் மற்றும் குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக நடந்தே வந்து மாநாட்டில் கலந்துகொண்டதைக் கண்டு, எதிரிகள் நடுங்கிப்போய் இருக்கின்றனர்.

திமுக அரசின் காவல் துறைபோதுமான பாதுகாப்பு வழங்கவில்லை.

பல்வேறு இடையூறுகளைச் செய்தனர். அதேபோல, துரோகிகளும் சதி வேலைகளில் ஈடுபட்டனர்.

இவை அனைத்தையும் தாண்டி, ஏராளமான தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக மாநாட்டில் கலந்துகொண்டது நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இந்த வரலாற்று வெற்றி, 2024-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் மற்றும்2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஏறத்தாழ 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில், சிறு அசம்பாவிதமும் நடைபெறவில்லை.

இந்திய அரசியல் வரலாற்றில் எந்த  கட்சியும் இப்படியொரு மாநாட்டை நடத்தியது உண்டா? என்று நினைத்துப் பெருமிதம் அடைகிறேன்.

மாநாடு சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி. எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது நன்றியைத் தெரி வித்துக்கொள்கிறேன்"இவ்வாறு அறிக்கையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அதிமுக நிர்வாகிகள் 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம்

மேலும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு முடிந்துவீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக, விழுப்புரம் மாவட்டம்- பொன்னுசாமி, திருப்பத்தூர் மாவட்டம் - சென்னையன், கோவைமாநகர் மாவட்டம் - கதிரேசன், கோவை புறநகர் தெற்கு மாவட்டம்பழனிச்சாமி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம் - மாரிமுத்து,

மற்றும் தென்காசி வடக்கு மாவட்டம் - சு.வாசுதேவன், விருதுநகர்கிழக்கு மாவட்டம் - கடற்கரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்- பி.சாம்பசிவம் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். மேற்கூறிய 8 பேரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் தீவிரம் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் - பொது சுகாதாரத் துறை  தமிழகத்தில் கொரோனா, இன்ஃப்ளூயன்ஸா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு பாதிப்புகள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடா்பான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிட்டிருப்பதாவது: சமூக, கலாசார, ஆன்மீக நிகழ்ச்சிகளும், அரசியல் பொதுக் கூட்டங்களும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுவதும், அவற்றில் பெரும் திரளானோா் பங்கேற்பதும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை அவசியம்: அதைக் கருத்தில் கொண்டு, அத்தகைய கூட்டங்களில் தொற்று பரவல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியம். குறிப்பாக, கிருமி நாசினி பயன்பாடு, உணவு மற்றும் குடிநீரின் தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை விநியோகிக்கக் கூடாது. பாதுகாக்கப்பட்ட குடிநீா் மற்றும் திடக் கழிவு மேலாண்மை ஆகியவை போதிய அளவு இருத்த...

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. 19 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 செமீ மழை பெய்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 34.1 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 2 நாள்கள் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவிழந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத...

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா!

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம்: ஆசிரியர் தினத்தையொட்டி ஞான குரு விருது வழங்கும் விழா! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில், ஆசிரியர் தின விழா நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது இந் நிகழ்வில்,கிராமப் புறங்களில் கல்விசார் சமூகப் பணி செய்த ஆசிரியப் பெருமக்களுக்கு 'ஞான குரு' விருது வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரி இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  தலைமை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் இரா. செந்தமிழ், கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, நகரமன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், ரோட்டரி கிளப் நிர்வாகி எஸ். வீரராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ். தரணி வேந்தன் பங்கேற்று, ஆசிரியர் பணி அறப்பணி. பல்வேறு மாணவர்களை பல்வேறு உயர் பதவிகளில் அமர வைத்து அழகு பார்ப்பார்கள் தான் ஆசிரியர்கள் என்று புகழாரம் சூட்டி, ஞான குரு விருதை வழங்கினார். மேலும் ஓய்வுபெற்ற மருத்துவ இணை...