தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் கருத்தரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசினர் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை ஷாயிராபீ தலைமை தாங்கினார்.
ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்த், கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இசையாசிரியர் டி.பி. வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தெள்ளார் சப் இன்ஸ்பெக்டர் ஏ. சுந்தரமூர்த்தி பங்கேற்று, பெண் கல்வியும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பெண்கள் பல்வேறு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றியும், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், பல்வேறு விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார்.
மேலும் இந் நிகழ்வில் தன்னம்பிக்கை பயிற்சியாளர் பி. மனோஜ் குமார், பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதியில் உதவி தலைமை ஆசிரியை மீனாட்சி நன்றி கூறினார்.
Comments
Post a Comment